மேலும் அறிய

மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

மும்மூர்த்திகளும் சேர்ந்து ஒரே இடத்துல இருக்கிற ஒரு அழகான வரலாற்று சிறப்புமிக்க கோவிலை பற்றி தான் இப்ப நாம பாக்க போறோம்.

திருச்சியில இருக்கிற உத்தமர் கோவில் பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த கோவில்ல எப்படி மும்மூர்த்திகள் வந்தாங்கன்னு யோசிக்கிறீங்களா?..

இந்து புராணத்தின்படி விஷ்ணு கடவுள் இங்க கடம்ப மரமாக தோன்றினார். அதனால இந்த ஊர் கதம்பனூர் அப்படின்னு பெயர் பெற்றது. இந்த கோவில்ல சிவபெருமான் பிஷாந்தர் வடிவில் அதாவது ஒரு துறவி வடிவில் இருப்பாரு. இந்த தளத்தில் விஷ்ணுவ வழிபட்டதன் மூலம் சிவபெருமான் குணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதனால இந்த கோவில் பிஷாந்தர் கோயில்னு அழைக்கப்படுகிறது. இதே போல விஷ்ணு ஒருமுறை பிரம்மா கடவுளின் பக்தியை சோதிக்க விரும்பினார். அப்போ பிரம்மா அவரை திருமஞ்சனத்தால் வழிபட்டார். அப்போ அந்த அபிஷேக நீர் பக்கத்துல இருந்த  ஒரு தொட்டியை நிரப்பியது. அந்த நீர் 'கதம்ப தீர்த்தம்' என்று அழைக்கப்பட்டது. பிரம்மாவின் பக்தியில திருப்தி அடைந்த விஷ்ணு பிரம்மாவுக்கு இத்தலத்துல சன்னதி இருக்கும்படி வரம் அளித்தார். இதனாலேயே இந்த இடத்துல மும்மூர்த்திகளும் இருக்காங்க.


மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

இந்த கோவிலோட வரலாறு பற்றி பார்த்தாச்சு இப்ப இந்த கோவில் எங்க இருக்குன்னு பார்க்கலாம். தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில்தான் இந்த உத்தமர் கோயில் இருக்கு. இந்த கோவில் 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி ஒரு கருங்கல் சுவர், கோவில்ல இருக்கிற எல்லா சன்னதிகளையும் சூழ்ந்து இருக்கு. இந்த கோவில்ல விஷ்ணு பகவான்- புருஷோத்தமன் அவதாரத்திலும், லட்சுமி தேவி- பூரணவள்ளி தாயார் அவதாரத்திலையும், சிவன்- பிஷாந்தார் வடிவிலையும், பார்வதி- சௌந்தர்யா பார்வதி வடிவிலையும், பிரம்மா மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகள் இருக்காங்க. இவங்க சப்த குரு அல்லது ஏழு குருக்கள் என்று அழைக்கப்படுறாங்க.


மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

மூன்று கடவுளும் ஒண்ணா இருக்கறதுனால எல்லா விஷேசங்களுமே இங்கு பொதுவாக கொண்டாடப்படுகிறது. அதுலயும் குறிப்பா செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிஷாந்தாருக்கும், புருஷோத்தமனுக்கும் அபிஷேகம் சிறப்பா நடக்கும் . அதே போல பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி போன்ற நாட்களில் கூட இங்கே விசேஷமா இருக்கும். கோவிலோட முக்கிய திருவிழாவா பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. இங்க சரஸ்வதி தேவி இருக்கறதுனால குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் கூட நிறைய பேர் இங்கே பண்றாங்க. திருச்சி மட்டுமில்லாம, மாவட்டத்தை சுற்றி இருக்கிற பல பகுதியில் இருந்து கூட இங்க வந்து குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்கிறார்கள்.


மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்தமர் கோவில் - எங்குள்ளது தெரியுமா..?

திருமங்கை ஆழ்வாரால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பத்து பாடல்களில் இந்தக் கோயில் போற்றப்படுது. இந்த கோவில் விஷ்ணு பகவானின் 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் , இந்த கோவிலுக்கு வந்தாலே மன அமைதியும், மகிழ்ச்சியும் தரும் அளவிற்கு தளம் அமைந்துள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தமர் கோவிலை நாம ஒரு தடவை விசிட் அடிச்சோம்னா எல்லா கடவுளையும் ஒரே நேரத்துல பார்த்த திருப்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
சதுரகிரி ஆடி அமாவாசை: பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது !
சதுரகிரி ஆடி அமாவாசை: பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது !

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Embed widget