![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு அபிஷேகப் பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
![விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் Special Abhishekam for Goddess Gayatri in Vishwakarma Siddhi Vinayagar Temple on the occasion of the new moon of the month of Karthigai TNN விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/13/d91901d4b6f8a61e479e8c74751de6c21702445066721113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலும்பச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம்.
கரூர் மாவட்டம்,தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தங்க தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தனர்.
அதை தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி மாரியம்மன் காட்டிய பிறகு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)