மேலும் அறிய

காஞ்சிபுரம் மீண்டும் வந்த சோமாஸ்கந்தர்! பக்தர்கள் ஹேப்பி -அடுத்தடுத்து நடப்பது என்ன?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சோமாஸ்கந்தர் சிலைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அம்மன், சோமாஸ்கந்தர் சிலைகள், கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வாயிலாக, வழக்கு முடியும் வரை சிலைகளை பாதுகாக்கும் படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பஞ்ச பூத ஸ்தலங்கள்

சைவ கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கு பஞ்ச பூத ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காளகஸ்தி ஆகிய 5 தலங்கள் பஞ்சபூத ஸ்தலங்களாக கருதப்படுகிறது. 

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், அதில் சிறிது சிதலம் அடைந்தது எனக் கூறி புதிய சிலை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 

நீதிமன்றத்தில் வழக்கு

இதற்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளும், தங்கங்களும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலை செய்த செயலில் உரிய தங்கம் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் முறைகேடு எனக் கூறப்பட்ட சிலைகள் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலரிடம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது இந்த வழக்கு காஞ்சி நீதிமன்றத்திலேயே, செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கும்பகோணத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் கும்பகோணம் நீதிமன்ற வாயிலாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வந்தடைந்த சிலைகள்

அதன் பின் காஞ்சிபுரம் நீதிமன்ற ஊழியர்கள் இந்த இரு சிலைகளை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்ற ஊழியர்கள் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர். 

அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர்கள் சிலைகளின் நீளம், அகலம் மற்றும் எடை உயரம் உள்ளிட்டவைகளை பல்வேறு நிலைகளில் அளவிட்டு குறிப்பெடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் நீதிமன்றம் அளித்த அளவுகளை சரிபார்த்து உறுதி செய்து கொண்டனர். அதன் பின் அவ்வளாகத்தில் உள்ள திருமேனி பாதுகாப்பு அறையில் இரு சிலைகளும் வைக்கப்பட்டது. தற்போது சிலைகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டாலும் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget