மேலும் அறிய

மயிலாடுதுறையில் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சிவாலய கும்பாபிஷேகம்..!

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. 1.துலா கட்ட விஸ்வநாதர், 2. திருவிழந்தூர் விஸ்வநாதர்,  3.வள்ளலார் விஸ்வநாதர், 4.படித்துறை விஸ்வநாதர், 5.பெரிய கோயில் விஸ்வநாதர், 6.கூறைநாடு விஸ்வநாதர், 7.தெப்பக்குளம் விஸ்வநாதர், ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. 


மயிலாடுதுறையில் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சிவாலய கும்பாபிஷேகம்..!

இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவியுடன் புதிதாக கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.


மயிலாடுதுறையில் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சிவாலய கும்பாபிஷேகம்..!

தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத முதல் யாகசாலை பூஜைகள் நேற்று இரவு துவங்கியது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் யாகசாலை பூஜைகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து திருக்கடையூர் ஸ்ரீ நிருத்தியாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Vinayagar Chathurthi 2022 : சிவாங்கி முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்த செளத் குயின்ஸ்!


மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழா  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். மேலும், வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. 


மயிலாடுதுறையில் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சிவாலய கும்பாபிஷேகம்..!

தொடர்ந்து மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை வரவழைக்கப்பட்டு சிவவாத்தியங்களுடன் யானையை பக்தர்கள் கோயிலுக்கு அழைத்து வந்தனர். யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்ந்து தீர்த்தமாக தெளித்தது. பக்தர்கள் யானைக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆராத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தங்கள் இல்லம் தேடி வந்த விநாயகர் உருவான யானையினை கண்டு குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget