மேலும் அறிய

சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களே.. ஆடி அமாவாசை தரிசனத்திற்கு செல்லும் முன் இதை கவனிக்கவும்

பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வர உள்ள நிலையில் திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். 

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர் செல்ல அனுமதி - மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.

யானை, சிறுத்தை, கரடி, புலிகள் நடமாட்டம்

மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட மக்கள் அதிகளவு செல்லும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் காவல்துறை, இந்து அறிநிலையத்துறை, வனத்துறை, சுகாதாரம், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் சதுரகிரி மலைப்பாதையில் யானை, சிறுத்தை, கரடி, புலிகள் வன விலங்குள் நடமாட்டம் இருப்பதால் சதுரகிரி மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழா நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இருதயவியல் மருத்துவர்கள்

மேலும் சதுரகிரிக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவின் போது மலை இறங்கிய பக்தர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 5 ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருதயவியல் மருத்துவர்கள் குழு சதுரகிரி மலையடிவாரத்தில் அமைக்கவுள்ளதாகவும்,  தாணிப்பாறை மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இருதயவியல் மருத்துவர்கள் கொண்ட குழுவினரை 24 மணி நேரமும் அமைக்க உத்தரவிட்டனர். மலை அடிவாரத்தை தவிர மலைப்பாதைகளில்  கடைகள் அமைக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலைப்பாதைகளில் எளிதில்ல தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலைமேல் உள்ள கடைகளில் பூஜைப்பொருட்களை தவிர வேறு ஏதேனும் பொருட்களை விற்பனை செய்தாலோ, தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மிகுந்த கண்காணிப்பு

மேலும் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட வழியாக மலைப்பாதைகளில் பாதைகள் உள்ளதால் நடந்து செல்லும் பக்தர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைக் மூலமாக தொடர்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவக்குழுவினர் 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் கொட்டைகைகள் கீற்றுகள் மூலமாக அமைப்பதற்கு அனுமதியில்லை எனவும், தகர செட்டுகள் மட்டுமே அமைக்க அனுமதி எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதைகளில் இளைப்பாறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தண்ணீர் பாயிண்டுகள். அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் வனத்துறையினர் காவல்துறையினர் சுகாதாரத் துறை அதிகாரிகள் எப்பொழுதும் மிகுந்த கண்காணிப்பது இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? - எச்.ராஜாவால் செல்வப்பெருந்தகை ஆவேசம்
யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? - எச்.ராஜாவால் செல்வப்பெருந்தகை ஆவேசம்
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
”துர்கை அம்மன் அருளை முழுமையாக பெற வேண்டுமா” அப்ப இத மட்டும் பண்ணுங்க போதும்..!
”துர்கை அம்மன் அருளை முழுமையாக பெற வேண்டுமா” அப்ப இத மட்டும் பண்ணுங்க போதும்..!
Embed widget