மேலும் அறிய

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா -நாளை உள்ளூர் விடுமுறை.

கோட்டை மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விளங்குகிறது. சேலம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு பட்டிக்கும் நாயகியாக விளங்கக்கூடிய கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறும் நாள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா -நாளை உள்ளூர் விடுமுறை.

குறிப்பாக, கடந்த 18 ஆம் தேதி கோட்டை மாரியம்மன் திருக்கோவில் இடம் கொடுக்க விழா புதிய கொடி மரம் நிறுவுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் முளைப்பாரி இடுதல் உள்ளிட்ட வைப்பவங்கள் நடைபெற்ற பின்னர் கொடி மரத்திற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கொடி மரம் நிறுவப்படும் இடத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் பதியப்பட்டது.

குருக்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தினை வேதங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. மேலும் புதிய கொடி மரத்திற்கும் அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்த குட ஊர்வலம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. தீர்த்த குணமானது திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த யானை மாசிலா மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது வள்ளுவர் சிலை, கடைவீதி அக்ரகாரம் பெரிய கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வந்தடைந்தது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்தும், முளைப்பாரி பயிரை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க அம்மன் வேடமிட்டு பரவசத்தில் நடனமாடிய பக்தர்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர். 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா -நாளை உள்ளூர் விடுமுறை.

இதனையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கப்பட்டன. மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் புணரமைக்கப்பட்டு முதன்முறையாக குடமுழுக்கு நடைபெறுவதால் ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலுக்கு திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் வருகை புரிந்தார்.

கோயிலில் செய்யப்பட்டுள்ள திருப்பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்த அவர் கோயில் பராமரிப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget