மேலும் அறிய

ராமகிருஷ்ண மிஷன் தொடங்கிய தினம்; தஞ்சையில் பகவான் ராமகிருஷ்ணர் ரதம் புறப்பாடு

வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் தனது குருவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக  கொல்கத்தா பேலூரில் ராமகிருஷ்ண மிஷனை 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்கினார்.

தஞ்சாவூர்: உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் தொடங்கப்பட்ட நாளையொட்டி, தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் பகவான் ராமகிருஷ்ணர் ரதம் புறப்பாடு நடந்தது.

மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி

கடவுளே மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர்.

பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம்

தன் மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியின் வடிவமாக வழிபட்டு, பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம் என்கிற பாரதப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர். நன்மையிலும் தீமையிலும் அன்பிலும் பயங்கரத்திலும் சந்தோஷத்திலும் துக்கத்திலும் அழகிலும் அழகின்மையிலும் உயர்விலும் தாழ்விலும் ஒன்றொன்றுக்கு மாறுபட்ட அனைத்திலும் இறைவனைக் காணும் தாந்த்ரீக சாதனைகளை பைரவி பிராமணி அம்மையார் மூலம் அவர் கண்டறிந்தார். அதன் மூலம் அனைத்திலும் இறைவனைக் காணும் மனநிலையைப் பெற்றார்.


ராமகிருஷ்ண மிஷன் தொடங்கிய தினம்; தஞ்சையில் பகவான் ராமகிருஷ்ணர் ரதம் புறப்பாடு

இழிந்ததையும் தெய்விகத்தையும் வேறுபடுத்தாமல் பார்த்தார். சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களுடைய கழிவறையைக் கழுவிச் சுத்தப்படுத்தியிருக்கிறார். பிச்சைக்காரர்கள் உண்ட உணவில் எஞ்சியிருந்ததைச் சாப்பிட்டிருக்கிறார்.

ராமகிருஷ்ண மிஷன் தொடக்கம்

வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் தனது குருவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக  கொல்கத்தா பேலூரில் ராமகிருஷ்ண மிஷனை 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்கினார். இப்போது உலகம் முழுவதும் ராமகிருஷ்ண மிஷன், ராமகிருஷ்ண மடம்  ஆன்மீக மற்றும் சேவை பணிகளை செய்து வருகிறது. இதைப் போற்றும் வகையில் மே 1 ஆம் தேதியான தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ரத திருவிழா நடைபெற்றது.

திருமூவர் படம் அலங்கரிக்கப்பட்ட ரதம் புறப்பாடு

தஞ்சாவூர் சிவாஜி நகர் ராமகிருஷ்ண மடத்தில் திருமூவர் படத்துக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, ராமகிருஷ்ணர் தியான நிலையிலான திருவுருவச் சிலை அமைத்து, பின்புறம் திருமூவர் படம் அலங்கரித்து வைக்கப்பட்ட ரதம் புறப்பட்டது.  இதில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சிங்கப்பூர் ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ், புதுச்சேரி ஸ்ரீமத் சுவாமி நரவரானந்த மகராஜ், திருவண்ணாமலை ஸ்ரீமத் சுவாமி மாத்ரு சேவானந்த மகராஜ் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஜமீன்தார் நடராஜ் காளிங்கராயர், வழக்குரைஞர் கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து ரத புறப்பாட்டை தொடங்கி வைத்தனர்.

இன்று ரதயாத்திரை நிறைவு

இந்த ரதம் சிவாஜி நகர், ஆப்ரகாம் பண்டிதர் நகர் தெருக்கள், மகா மாரியம்மன் கோயில் பகுதி வழியாகச் சென்றது. தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (மே 2) பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சிவராயர் தோட்டம் தெருக்கள், கிருஷ்ணன் கோயில் தெரு, விஜய மண்டபம் தெரு வழியாக வலம் வந்து கலைவாணி மன்றத்தில் ரத யாத்திரை நிறைவடைகிறது.

பக்த மண்டலியை சேர்ந்தவர்களின் பக்திப்பாடல்கள்

விழாவில் பக்த மண்டலியைச் சேர்ந்த பெண்கள் பக்தி பாடல்களை இசையுடன் பாடி வந்தனர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வரலாற்றுச் சிறப்புக்கள் அவரது அமுத மொழிகள் வாசிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அலங்கரித்து ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருமூவர் படத்துக்கு தீபாராதனை செய்து புஷ்பார்ச்சனையுடன் வழிபட்டனர். இதில் ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget