மேலும் அறிய

Onam Festival : ஓணம் வந்தல்லோ.. ஓணம் பண்டிகையை பத்தியும், மகாபலி சக்கரவர்த்தியையும் தெரியுமா?

ஆண்டுதோறும் அறுவடை திருவிழாவானது கேரள  மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில்  இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும்  மாநில திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல்  கர்நாடகாவை பொருத்தவரை மகா சங்கராந்தி  கேரளாவை பொறுத்தவரை ஓணம்  போன்ற பண்டிகைகள்  அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மையோடு  இந்து மதத்தின் சிறப்பையும்  உலகிற்கு பறைசாற்றுகிறது  அந்த வகையில்  கேரளாவில்  இந்த வருடத்திற்கான ஓணம்  பண்டிகை   ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

 ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள  மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது கலாச்சார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. கேரளாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் மன்னன் மகாபலியின் வருகையை நினைவுபடுத்தும் ஒரு திருவிழாவாகவே ஓனம் திருவிழா பார்க்கப்படுகிறது. சமய நம்பிக்கையின்படி, ஒரு காலத்தில் கேரளாவை ஆண்ட புராண மன்னனின் பொற்கால ஆட்சியைக் கொண்டாடுகிறது. இந்த பண்டிகை  10 நாட்கள் கொண்டாட்டங்களின் கலவையாகும்.

ஆகஸ்ட் 30, 2022: மகாபலி தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பும் நாளின் உற்சாகத்தை திருவிழா உணர்த்துகிறது. அத்தச்சமயம்  பிரமாண்ட வாமனமூர்த்தி தரித்த அலங்கார ஊர்தி ஊர்வலங்கள் கோயில்  கொச்சி மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலும்  நடைபெறுகின்றன.  அத்தாப்பூ எனப்படும் மஞ்சள் இதழ்களால் ஆனது பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது.முதல் அடுக்கு அலங்காரத்தை தொடர்ந்து.


சித்திரை - ஆகஸ்ட் 31, 2022
இரண்டாவது நாளில், பூக்களத்தில் மேலும் இரண்டு அடுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பூக்கள் சேர்க்கப்படுகின்றன.ஒவ்வொரு நாளும் ஓணத்தின் போது அடுக்குகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இந்த பூக்கோலம் ஆனது தங்களது மாமன்னர் மகாபலியை வரவேற்பதற்காக போடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள்  சித்திரை அன்று கோவில்களுக்கு செல்வது வழக்கம்.


சோதி - செப்டம்பர் 1, 2022
இந்த நாளில், மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் நகைகளை வாங்குகிறார்கள். பெண்கள் வெள்ளையில் கலர்கலரான பார்டர் வைத்த புடவை அணிய விரும்புகிறார்கள், ஆண்கள் முண்டு வாங்குகிறார்கள், அதே நேரத்தில் சிறுமிகள் பட்டு பவடாவை தேர்வு செய்கிறார்கள். ஓணக்கொடி என்று அழைக்கப்படும் விழாவைக் குறிக்கும் வகையில் பூக்களத்தில் மேலும் ஒரு அடுக்கு மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

விசாகம் - செப்டம்பர் 2, 2022.
ஓணசத்யா எனப்படும் ஓனம் பாரம்பரிய உணவு விருந்து தயாரிப்பு நான்காவது நாளில் தொடங்குகிறது, ஏனெனில் மலையாளிகள் தங்கள் வீடுகளில்  புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை வைத்திருப்பார்கள். இன்றைய  சிறப்பினை குறிக்க குடும்பங்கள் தோறும் பலவகையான உணவுகளை தயாரித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து தாங்களும் உண்ணுகின்றனர்.

அனிசம் - செப்டம்பர் 3, 2022
ஐந்தாம் நாள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பா ஆற்றில் வல்லம்காளி என்ற புகழ்பெற்ற படகுப் போட்டி நடத்தப்படுகிறது.

திரிகேதா - செப்டம்பர் 4, 2022
திருக்கேதா என்பது குடும்பங்கள் தங்கள் மூதாதையரின் வீடுகள் மற்றும் கோயிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெறும் சிறப்பு நிகழ்வாகும். இதற்கிடையில், பூக்களத்தில் புதிய மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

மூலம் - செப்டம்பர் 5, 2022
கொச்சி முழுவதும் உள்ள கோயில்களில் இன்று முதல் ஓணம் விருந்து  தொடங்குகிறது. கேரளாவின் பல்வேறு இடங்களில் புலிகலி, கைகொட்டுகளி உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன.

பூராடம் - செப்டம்பர் 6, 2022
எட்டாவது நாளில், ஒவ்வொரு நாளும் பூக்கள் சேர்ப்பதன் மூலம் பூக்களம் பெரிதாகிறது. பூராடம் பூக்களத்தின் நடுவில் மகாபலி மற்றும் வாமனரின் களிமண் சிலைகளை வைத்து பூராடம் தொடங்குகிறது. புராணத்தின் படி, அந்த சைகை மகாபலிக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் வருவதற்கான அழைப்பைக் குறிக்கிறது.

உத்ராடம் - செப்டம்பர் 7, 2022
மேலும், முதல் ஓணம் என்று அழைக்கப்படும், கேரளாவில் உள்ள அனைத்து பக்தர்களும் மகாபலியின் வருகையைக் குறிக்க சிறப்பு தயாரிப்புகளை செய்கிறார்கள். புதிய அறுவடையின் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

திருவோணம்:

ஆண்டுக்கு ஒரு முறை தங்களை காண இல்லத்திற்கு வரும். மன்னன் மகாபலியை வரவேற்கும் அடையாளமாக மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு தடவி, திருவிழாவின் கடைசி நாளான திருவோணம். ஓணசத்யா எனப்படும் ஓணம் விருந்து குடும்பங்களால் இன்று தயாரிக்கப்பட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரப்பட்டு தங்கள் குடும்பத்தினருடன் ருசிக்கிறார்கள்.

இவ்வாறு வாமன அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் மண்ணுலகிற்கு  அனுப்பப்பட்ட மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தி ஆனவர் ஒவ்வொரு வீடுகளுக்கும் இன்றைய ஓணம் தினத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் விஜயம் புரிந்து அருள் பாலிக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget