மேலும் அறிய

கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்; கோலாகலமாக நடந்த ஆவணி மூலத்திருவிழா...!

நெல்லையப்பர் கோயில் முன்பாக சாபமிட்டு கோபித்துக் கொண்டு சென்ற கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டும் ஆவணி மூலத் திருநாள் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோச்சனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. சோழர்களின் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர் கருவூர் சித்தர். இவரின் கடும் தவத்தினால் எட்டு வகை சித்திகள் கருவூர் சித்தருக்கு கிடைத்தது. சித்திகள் பெற்ற கருவூர் சித்தர் சிவ தல யாத்திரைகள் மேற்கொள்கிறார். ஈசனை அழைத்த உடன் அவர் காட்சி கொடுக்க வேண்டும் என்ற சித்தியும் பெற்றார்.


கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்; கோலாகலமாக நடந்த ஆவணி மூலத்திருவிழா...!

இந்த நிலையில் நெல்லை வந்த கருவூர் சித்தர் நெல்லையப்பரை அழைத்தார். குறிப்பாக 9ம் திருநாளில் இரவில் கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று ”நெல்லையப்பா”, ”நெல்லையப்பா” என்று அழைத்துள்ளார். ஆனால் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் பதில் அளிக்கவில்லை. சித்தாின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக  நெல்லையப்பர் செவிசாய்க்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்தர்,  ஈசன் இங்கு இல்லை, எருக்கும், குறுக்கும் இங்கு எழுக என்று சாபமிட்டு மானூரை நோக்கி நடந்தார். நெல்லையை அடுத்த மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு வந்த சித்தரை சிவதொண்டராக வந்து நெல்லையப்பர் அழைத்தார். சற்று கோபம் தணிந்த சித்தர், மானூர் வந்து காட்சி தந்து சாபவிமோச்சனம் பெறலாம் என ஈசனிடம் கூறி நடந்தார். இதனையடுத்து நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் மானூர் சென்று சித்தருக்கு ஜோதிமயமாக காட்சி கொடுத்தனர். தொடர்ந்து கருவூர் சித்தரை உடன் நெல்லைக்கு அழைத்து வந்தனர். நெல்லை வந்ததும், இங்கு ஈசன் உள்ளார். எடுக்கும், குறுக்கும் அறுக என கூறி சாப விமோச்சனம் வழங்கினார்.


கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்; கோலாகலமாக நடந்த ஆவணி மூலத்திருவிழா...!

இந்த நிகழ்வால் மகிழ்ந்த சித்தர் எனக்கு காட்சி கொடுத்த ஆவணி மூலத்திருநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காட்சி தர இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அதன்படி, ஆவணி மூலத்திருநாளின் 10வது நாளான நேற்று இரவு  கருவூர் சித்தரை அழைத்து வர சுவாமி சந்திரசேகரர் பவானி அம்பாள் பாண்டியராஜா சண்டிகேஸ்வரர் தாமிரபரணி அம்பாள் அகஸ்தியர் குங்கிலிய நாயனார் ஆகியோா் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளினர். மானூர் அம்பல தெருவில் சுவாமி நெல்லையப்பர் கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும்  நிகழ்வும் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோவில் அம்பலத்தில் அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாக கூறி கருவூர் சித்தரை திருநெல்வேலிக்கு அழைக்கும் திருவிளையாடல் ஓதுவாமூர்த்திகளால் பாடப்பட்டது. நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூர் சித்தர் தன் சாபத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். இத்திருவிழாவில் பக்தா்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி, அம்பாள் மற்றும் கருவூர் சித்தர் தாிசனம் பெற்றனர்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
Gaza Tragedy: சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
Embed widget