மேலும் அறிய

Navratri Golu Dolls: 35 வடிவிலான கொலு பொம்மைகள்...விழுப்புரத்தில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

விழுப்புரத்தில் நவாரத்தி விழாவிற்கு 35 வடிவிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும். நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அக்டோபர் 24-ந் தேதி நிறைவடைகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்கை, சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி தேவிகள் ஒன்றாக சேர்ந்து வதம் செய்ததே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

கொலு வழிபாடு:

9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது கொலு வழிபாடு. நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் விதமாக வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. வண்ண அலங்கார பொம்மைகளை அடுக்கி வழிபடுவதே இந்த கொலு கொண்டாட்டம் ஆகும். கொலு பண்டிகைக்கு 3, 5, 7, 9 என ஒற்றைப் படையில் படிகள் அமைக்க வேண்டும். இதில், எந்த படியில் என்னென்ன வைக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு உயிர்களின் பொம்மையை வைக்க வேண்டும்.


Navratri Golu Dolls: 35 வடிவிலான கொலு பொம்மைகள்...விழுப்புரத்தில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

விதவிதமான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து 10-வது நாளான தசமி அன்று 'விஜயதசமி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை அம்பிகையை மூன்று வடிவங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான நவராத்திரி விழா வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குவதால் அன்றைய தினம் வீடுகள், ஆலயங்கள் தோறும் கொலு வைத்து மக்கள் வழிபாடுகளை செய்வது வழக்கம்.


Navratri Golu Dolls: 35 வடிவிலான கொலு பொம்மைகள்...விழுப்புரத்தில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

நவராத்திரி விழா கொண்டாடத்தின் போது 9 நாட்களுக்கு 9 படிகளில் பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகள், சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்வது நவராத்திரியின் அங்கமாக உள்ளது. இதனால் நவராத்திரி விழா தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள கரடிபாக்கம் கிராமத்தில் 35 வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு அடி முதல் 3 அடி உயரத்திலான கொலு பொம்மைகள் இயற்கையை பாதிக்காத வண்ணம் காகித கூழ், மரவள்ளி கிழங்கு கூழ், வண்டல் மண் கொண்டு செய்யப்படுவதால் கேரளா, பெங்களூர், மதுரை, கோவை, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த பொம்மைக்கு அதிக வரவேற்பு உள்ளதால் அதிக அளவு ஆர்டர்கள் வந்துள்ளதாக கொலு தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொலு பொம்மைகள் தயாரிக்க வாங்ககூடிய காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவைகளின் விலை உயர்ந்துள்ளதால் ஏரிகளிலிருந்து பொம்மை தயாரிப்பாளர்களுக்கு வண்டல் மண் எடுக்க அரசு உதவி புரிய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரத்தில் செய்யப்படும் கொலு பொம்மைகள் 300 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கொரொனோ வந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு இத்தொழில் மீண்டுள்ளதாக கூறுகின்றனர். 


Navratri Golu Dolls: 35 வடிவிலான கொலு பொம்மைகள்...விழுப்புரத்தில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

பொம்மை உற்பத்தி செய்முறை:

முதலில் கொலு பொம்மை செய்வதற்கான கலவை  தயாரிக்கப்படுகிறது. பசை மாவு, கிழங்கு மாவு, மைதா மாவு முகத்தில் பூசும் பவுடர், சிமெண்ட் பேப்பர் சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டு அந்த கலவையிலிருந்து பொம்மை செய்யப்படுகிறது. ஒரு காகிதக்கூழ் பொம்மை செய்வதற்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகிறது. 5 நபர்கள் கொண்ட குழுவாக பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சென்ற  ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளன. 

கொலுபொம்மைகள் வாங்க விரும்புவோர்  9585858470 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுக்கலாம் என குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget