மேலும் அறிய

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது கந்தூரி விழா - சந்தனம் அரைக்கும் பணி தீவிரம்..!

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது ஆண்டு கந்தூரி விழாவில் நாகூர் ஆண்டவருக்குச் சந்தனம் பூசும் வைபவத்துக்காக, யாத்ரீகர்கள் சந்தனம் அரைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம்: ஆன்மீக ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் உதாரணமாகத் திகழும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, கம்பீரமான கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மகத்தான விழாவின் முக்கிய நிகழ்வான நாகூர் ஆண்டவருக்குச் சந்தனம் பூசும் வைபவத்துக்காக, யாத்ரீகர்கள் சந்தனம் அரைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொடியேற்றத்துடன் துவங்கிய ஆன்மீகப் பயணம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நாகூர் ஆண்டவர் தர்கா, மதங்களைக் கடந்து அனைவரும் வந்து வழிபடும் ஒரு புனிதத் தலமாகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பெருக்குடன் துவங்கிய இந்தக் கந்தூரி விழா, நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பெருமைகளை நினைவு கூறும் வண்ணம் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

கந்தூரி விழாவின் பிரதான நிகழ்வான, நாகூர் ஆண்டவருக்குச் சந்தனம் பூசும் வைபவம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக, நாகையிலிருந்து நவம்பர் 30 -ம் தேதி இரவு பிரம்மாண்டமான சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, டிசம்பர் 1 -ஆம் தேதி அதிகாலை நாகூர் வந்தடைந்து, சந்தனம் பூசும் வைபோகம் நடைபெறும்.

அரசு சார்பில் வழங்கப்பட்ட சந்தனம்

இந்த ஆண்டு கந்தூரி விழாவிற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் 45 கிலோ எடை கொண்ட உயர்தர சந்தன மரக் கட்டைகள் மரியாதையுடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உதவியானது, விழாவின் மகத்துவத்தையும், மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

வழங்கப்பட்ட இந்தச் சந்தன மரக் கட்டைகள் தற்போது, நாகூர் ஆண்டவர் சன்னதியின் பின்புறம் உள்ள பிரத்யேக இடத்தில் பாரம்பரிய முறைப்படி அரைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சந்தனத்தை அரைக்கும் பணியானது, வெறும் ஒரு சடங்காக இல்லாமல், பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாக யாத்ரீகர்களால் முன்னெடுக்கப்படுகிறது.

பக்தி நிறைந்த சந்தனம் அரைக்கும் பணி

சந்தனம் அரைக்கும் பணி ஒரு கடுமையான விரதத்துடன் கூடிய பக்திச் சடங்காகக் கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருக்கும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பத்து நாட்கள் தர்காவிலேயே தங்கி, இந்தச் சந்தன மரக் கட்டைகளை அரைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

*துண்டாக்குதல்: முதலாவதாக, 45 கிலோ சந்தன மரக் கட்டைகள் பாரம்பரிய முறைப்படி சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது.

*ஊறவைத்தல்: பின்னர் இந்தச் சந்தனத் துண்டுகள், நறுமணமிக்க ஜவ்வாது கலந்த பன்னீரில் பல மணி நேரம் ஊற வைக்கப்படுகின்றன. இது சந்தனத்திற்கு இயற்கையான நறுமணத்தையும், கூடுதல் குளிர்ச்சியையும் தருகிறது.

*அரைத்தல்: ஊற வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகள், பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட கருங்கற்களில் கையால் தேய்ந்து அரைக்கப்படுகின்றன.

குழுக்களாக அமர்ந்து, அல்லாவின் நாமத்தைப் பரவசத்துடன் உச்சரித்தவாறு யாத்ரீகர்கள் இந்தச் சந்தனத்தை அரைக்கும் காட்சி, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. இந்த அரைக்கும் பணி இரவும் பகலும் அயராது நடைபெற்று வருகிறது.

சந்தனம் அரைக்கப்படும்போது எழும் தெய்வீக மணமானது, தர்கா வளாகம் முழுவதையும் நிரப்பி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மீக அமைதியையும், புத்துணர்வையும் அளிக்கிறது.

சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்வு 

அரைத்து முடிக்கப்பட்ட, பன்னீர் மற்றும் ஜவ்வாது கலந்த இந்த புனிதச் சந்தனம், பிரத்யேகமான குடங்களில் நிரப்பப்படும். பின்னர் இந்தக் குடங்கள் அனைத்தும் நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்களிடம் மிகுந்த மரியாதையுடன் ஒப்படைக்கப்படும்.

நாகை நகரில் அமைந்துள்ள யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து, உலகப் புகழ் பெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 30 -ஆம் தேதி இரவு வெகு விமரிசையாகப் புறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மேள தாளங்கள், வான வேடிக்கைகள் மற்றும் பக்திப் பாடல்களுடன் புறப்படும் இந்த ஊர்வலம், இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாலை நாகூர் தர்காவை வந்தடையும்.

தர்காவின் தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, மிகுந்த பக்திச் சிரத்தையுடன் தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்படும். அங்கு, நாகூர் ஆண்டவர் ஹஸ்ரத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மக்பராவிற்குப் (சன்னதிக்கு) பாரம்பரிய முறைப்படி புனிதச் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

சந்தனம் பூசப்பட்ட பிறகு, அந்தப் புனிதச் சந்தனம் யாத்ரீகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படும். இந்தச் சந்தனப் பிரசாதம் சகல நோய்களையும் நீக்கி, அமைதியையும், ஆசீர்வாதத்தையும் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Embed widget