Sivagangai: மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார் !
வீர அழகர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோயில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் விழா இன்று காலை 7:45 மணிக்கு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார். இதனை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.#sivagangai | #manamadurai #வீரஅழகர் | #கள்ளழகர் @SRajaJourno | @athens_south @dhamurmm91 | @imanojprabakar | @abpnadu pic.twitter.com/9xQnvtpV85
— arunchinna (@arunreporter92) May 5, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















