மேலும் அறிய

Sankatahara Chaturthi: வாழ்க்கையே கஷ்டமா இருக்கா? - சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பாருங்க!

சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகருக்கு உகந்த புனித நாளாக பார்க்கப்படுகிறது. சங்கடம் என்றால் கஷ்டம்,துன்பம் என்பது பொருளாகும். ஹர என்றால் அழித்தல் என அர்த்தமாகும்.

இந்து மதத்தில் விநாயகப் பெருமான் முழு முதற் கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவரை வழிபடாமல் நாம் எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்குவதில்லை.

தடைகளை தகர்க்கக்கூடியவர் விநாயகர் என்ற ஐதீகம் அனைவரிடத்திலும் உள்ளது. இப்படியான விநாயகருக்கு ஆனைமுகன், கணபதி, பிள்ளையார் என ஏகப்பட்ட பெயர்கள் உண்டு. அவருக்கென பல்வேறு விசேஷ தினங்களும் உள்ளது. குறிப்பாக சதுர்த்தி விரதம்,சங்கடஹர சதுர்த்தி ஆகியவை ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க விசேஷ தினமாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் சங்கடஹர சதுர்த்தி நாளில் நாம் விரதமிருக்கும் வழிமுறைகளையும், வழிபாடு செய்யும் பின்பற்ற வேண்டியவைப் பற்றியும் காணலாம்.

சங்கடஹர சதுர்த்தி பின்னணி

சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகருக்கு உகந்த புனித நாளாக பார்க்கப்படுகிறது. சங்கடம் என்றால் கஷ்டம்,துன்பம் என்பது பொருளாகும். ஹர என்றால் அழித்தல் என அர்த்தமாகும். இந்த திதியானடு ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் பௌர்ணமிக்கு பிறகு வரும் நான்காவது  நாளான சதுர்த்தி திதியில் வருகிறது. இந்த விசேஷ தினம் செவ்வாய்கிழமை வந்தால் அங்காரக சங்கஷ்டி சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. 

பொதுவாக எந்தவொரு விசேஷ நாள் இருந்தாலும் விரதம் இருந்து வழிபடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியான வகையில் விநாயகர் எளிமையின் உருவம் என்பதால் அவருக்குரிய விரதமும் மிக எளிமையானது. இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். 

விரதம் இருப்பது எப்படி?

அப்படியான சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜையறையில் உள்ள விநாயகர் சிலை அல்லது புகைப்படத்தை மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.  காலை முதல் மாலை வரை விரதம் இருக்கலாம். உடல்நலம் முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் தொடங்கலாம். அன்றைய நாளில் மாலையில் தான் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.  

ஆனால் பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் அனைவராலும் மாலையில் கோயில் செல்ல முடியாது. எனவே ஏதேனும் ஒரு வேளையில் கோயிலுக்கு செல்லலாம். இன்றைய நாளில் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறைந்தப்பட்சம் அருகம்புல் வாங்கியாவது வழிபட வேண்டும். வீட்டில் வழிபடுவதாக இருந்தால் சுண்டல், கொழுக்கட்டை என விநாயகருக்கு உகந்த உணவுப் பொருட்களைப் படைக்கலாம். 

இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷங்கள் அகலும். திருமணத் தடை, குழந்தைபேறு ஆகியவற்றில் நல்ல செய்தி வந்து சேரும். சகல சௌபாக்கியங்கும் பெற்று நலமுடன் வாழ்வீர்கள். நீங்கள் விரதம் இருப்பவர்களாக இருந்தால் சதுர்த்தி திதி தொடங்கிய நிமிடத்தில் இருக்கலாம். இல்லாவிட்டால் அன்றைய நாளின அதிகாலையில் இருந்து இருக்கலாம். விரதம் மேற்கொள்பவர்கள் வீட்டில் காலை, மாலை என இருவேளைகளிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். மாலை பூஜை செய்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget