மேலும் அறிய

மார்கழி மாத இசைவிழா.. அனைவரையும் வெகுவாக கவர்ந்த டாக்டர்.எல். சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி..!

சென்னையில் நடைபெற்ற லக்ஷ்மிநாராயணா குளோபல் இசை விழாவில் நடந்த  புகழ்பெற்ற வயலின் கலைஞர்களில் ஒருவரான  டாக்டர்.எல். சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

சென்னையில் நடைபெற்ற லக்ஷ்மிநாராயணா குளோபல் இசை விழாவில் நடந்த  புகழ்பெற்ற வயலின் கலைஞர்களில் ஒருவரான  டாக்டர்.எல். சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

மார்கழி மாதம் என்றாலே இசைப்பிரியர்கள் மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் சென்னையில் நடைபெறும் இசை விழா  தான் நியாபகத்திற்கு வரும்.  இங்குள்ள இசை சபாக்களில் பழம்பெரும் இசைக்கலைஞர்கள் முதல் இளம் கலைஞர்கள் வரை அனைவரது கச்சேரிகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற ரசிக ரஞ்சனி சபா ஆடிட்டோரியத்தில் ‘லட்சுமிநாராயணா குளோபல் மியூசிக் விழா’ தொடங்கியது.

புகழ்பெற்ற வயலின் கலைஞர்களில் ஒருவரான பத்மபூஷன் விருதுபெற்ற டாக்டர்.எல். சுப்ரமணியம்  தனது தந்தை லட்சுமி நாராயணா நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 1992 ஆம் ஆண்டு சென்னையில் பழம்பெரும் இசைக்கலைஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் செம்மங்குடி ஐயர் ஆகியோர் முன்னிலையில் இந்த இசை விழா முதன்முதலில் தொடங்கப்பட்டது.

நடப்பாண்டு இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  டாக்டர் எல்.சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்களின் செவிகளுக்கு இசை விருந்தளித்த அவர், "சஹானா" ராகத்தில் தொடங்கி பின்னர் "சுப பந்து வராளி" ராகத்துடன் முடித்தார். இது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத இன்னிசை விருந்தாக அமைந்தது.  இதனைத் தொடர்ந்து நமது ஏபிபி நாடுடன் பேசிய சுப்பிரமணியம், “இது இசை விழாவின் ஆரம்பம் மட்டுமல்ல, தனது தந்தையும் பழம்பெரும் வயலின் பேராசிரியருமான வி.லட்சுமிநாராயணாவுக்கு செய்த புகழஞ்சலி” என தெரிவித்தார். 

மேலும் “சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளேன். இங்குள்ள ரசிகர்களின் ரசனை தனக்கு தெரியும்” என்றும் அவர் கூறினார். “என்னுடைய இளமை காலத்தில் நானே ஒரு ரசிகனாக பல கச்சேரிகளுக்குச் சென்றிருக்கிறேன். என் வாழ்நாளின் பல வருடங்களை இங்குதான் கழித்திருக்கிறேன். தற்போது ஒவ்வொரு ஆண்டும் என் தந்தையின் நினைவாக இந்த விழாவை நடத்தி வருகிறேன். சென்னையில் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி, 20ஆம் தேதி கொச்சியிலும்,  21ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், 22ஆம் தேதி ஆலப்புழாவிலும் நடைபெற்றது. 

மேலும் வரும் ஜனவரி 26 பெங்களூருவிலும் மற்றும் புனேவில் ஜனவரி 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளது” டாக்டர்.எல். சுப்ரமணியம் கூறினார். சுமார் 1 மணி நேரம் நடந்த டாக்டர் எல்.சுப்ரமணியம் இசை நிகழ்ச்சி நடப்பாண்டு மார்கழி மாத இசை விழாவின் சிறப்பான ஒன்றாக அமைந்தது என்றே சொல்லலாம். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Embed widget