மேலும் அறிய

Krishna Jayanthi: மச்ச அவதாரம் முதல் கல்கி வரை.. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்னென்ன..? பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க..!

காக்கும் கடவுளான விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களும் 10 வித தருணங்களில் உலகை காப்பதற்காக எடுக்கப்பட்டதாக இதிகாசங்கள் கூறுகின்றன.

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 9வது அவதாரம் கிருஷ்ண அவதாரம் ஆகும். ஆவணி மாதத்தில் கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. நடப்பாண்டில் கிருஷ்ண ஜெயந்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது,

இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1.மச்ச அவதாரம்:

விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். மிகப்பெரிய வெள்ளப்பெருக்கின்போது விஷ்ணு பெருமான் மீன் வடிவத்தை எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த அவதாரமே மச்ச அவதாரம் ஆகும். மச்ச அவதாரம் எடுத்த விஷ்ணு உலகின் முதல் மனிதன் என்று நம்ப்படும் மனுவையும், சில உயிர்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது.

2. கூர்ம அவதாரம்:

கூர்ம என்றால் ஆமை என்று அர்த்தம். விஷ்ணு பெருமான் ஆமை வடிவத்தை எடுத்ததே கூர்ம அவதாரம் என்று கூறப்படுகிறது. பாற்கடலை கடைய பயன்படுத்தப்பட்ட மந்திரசாலா மலை கடலில் மூழ்கியபோது, அது மூழ்காமல் விஷ்ணு எடுத்த கூர்ம அவதாரமே அதை தாங்கிப்பிடித்ததாக புராணங்கள் கூறுகிறது.

3. வராக அவதாரம்:

வராக என்றால் காட்டுப்பன்றி என்று அர்த்தம். அண்டத்துக்குரிய பகுதியின் கீழ் இந்த உலகத்தை எடுத்துச் சென்ற ஹிரன்யஷா அரக்கனை கொல்வதற்காகவே இந்த அவதாரத்தை விஷ்ணு பகவான் எடுத்துள்ளார். தனது வராக அவதாரத்தின் மூலம் ஹிரன்யஷாவை வதம் செய்த பிறகு உலகத்தை மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு வந்தார்.

4. நரசிம்ம அவதாரம்:

மகாவிஷ்ணுவின் முக்கியமான அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்றாகும். விஷ்ணுவின் மிகப்பெரும் பக்தனான பிரகலாதனை காப்பதற்காக பாதி மனிதன், பாதி அரக்க அவதாரம் எடுத்து இரண்யன் எனும் அரக்கனை தனது மடியில் இட்டு அழித்த அம்சமே இந்த நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம அவதாரத்தை பற்றி திரைப்படங்களே எடுத்துள்ளனர்.

5.வாமன அவதாரம்:

மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்ட குள்ள மனிதர் அவதாரமே இந்த வாமன அவதாரம் ஆகும். முதல் அடியை ஆகாயத்திலும், இரண்டாம் அடியை நிலத்திலும் மூன்றாவது அடியை மகாபலி மன்னன் தலையிலும் வைத்து அவனை வதம் செய்ததே வாமன அவதாரம் ஆகும். மகாபலி மன்னன் தன் நாட்டிற்கு வருடத்திற்கு ஒரு முறை திரும்ப வருவதே கேரளாவில் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

6. பரசுராம அவதாரம்:

விஷ்ணுவின் 6வது அவதாரம் பரசுராம அவதாரம் ஆகும். மிகவும் பலமிகுந்த ஒருவராக திகழ்ந்தவர் பரசுராமர் என்று இதிகாசங்கள் கூறுகிறது. அவரிடம் இருந்த கோடாரி சிவபெருமானின் வரத்தால் கிட்டியது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

7.ராம அவதாரம்:

தசரத மன்னனுக்கு மகனாக ராமராக விஷ்ணுபெருமான் அவதரித்ததே ராம அவதாரம் என்று இதிகாசங்கள் கூறப்படுகிறது. இந்தியாவில் ராமரைப் பற்றி பல கதைகள் உள்ளன. இந்த ராம அவதாரம் மூலமாக அவர் ராவணனை வதம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.

8.பலராம அவதாரம்:

மகாவிஷ்ணுவின் 8வது அவதாரமாக கருதப்படுவது பலராம அவதாரம் ஆகும். கம்சனை அழிக்கப் பிறந்த கண்ணனுக்கு முன் பிறந்த குழந்தையே பலராமன் என்றொரு கதையும் உண்டு. பலராம அவதாரத்தை வட இந்தியாவில் புத்த அவதாரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

9.கிருஷ்ணர் அவதாரம்

மகாவிஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணர் அல்லது கண்ணன் அவதாரம் ஆகும். கம்சனை அழிக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே கிருஷ்ணர் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போர்க்களத்தில் வழங்கிய உபதேசங்களே பகவத் கீதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

10.கல்கி:

கலியுகம் என்று சொல்லப்படும் தற்போது நடந்து வரும் யுகத்தில் மகாவிஷ்ணு எடுக்கப்போகும் 10வது அவதாரம் கல்கி அவதாரம் என்று கூறப்படுகிறது. தீமைகள் தலைதூக்கி மக்கள் அவதிக்குள்ளாகும்போது ஒரு வெள்ளை குதிரையில் பெரிய வாளோடு மக்களை காக்க மகாவிஷ்ணு எடுக்கப்போகும் 10வது அவதாரமே கல்கி அவதாரம் என்று நம்பப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget