![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ராப்பத்து நிகழ்ச்சி - சுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் காட்சி
கரூர் நகரப் பகுதியான மேட்டுத்தெரு பகுதியில் குடிகொண்டு வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
![கரூர்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ராப்பத்து நிகழ்ச்சி - சுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் காட்சி Karur: Rappatu performance in honor of Vaikunda Ekadasi. Displayed in Swami Andal's attire TNN கரூர்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ராப்பத்து நிகழ்ச்சி - சுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/80c81678c0aa084e218342d53b4a19151673414624196183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ராப்பத்து நிகழ்ச்சியில் சுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
கரூர் நகரப் பகுதியான மேட்டுத்தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசிசையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராப்பத்து நிகழ்ச்சியில் அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆண்டாள் அலங்காரத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார். ஆலய மண்டபத்தில் இருந்து சுவாமிக்கு சிறப்பு பொருட்களா அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து பட்டாடைஉடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, ஆண்டாள் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி ஆலய வலம் வந்தார் . பின்னர் ஆண்டாள் சன்னதி அருகே மாலைமாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு ரொம்ப ஆலாத்தியுடன், மகா தீபாராதனை காட்டப்பட்டு சுவாமியின் திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது. ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசி சிறப்பு நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆளை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
தேர்வீதி ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி பூஜை.
கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும் மூலவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும் , உற்சவர் கணபதிக்கும் ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)