மேலும் அறிய

கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 71 சிலைகள் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடு நடத்தி,  ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் முழுதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார்கள் சார்பில் 277 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 143 சிலைகள் சுவாமி தரிசனம் செய்து, ஆறுகளில் கரைக்கப்பட்டன. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இதன்படி, அரவக்குறிச்சி பகுதியில் 18 சிலைகளும், சின்ன தாராபுரம் பகுதியில் 18 சிலைகளும், வேலாயுதம் பாளையம் பகுதியில் 27 சிலைகளும், குளித்தலை பகுதியில் 8 சிலைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சுவாமி தரிசனம் செய்து, ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. இந்த சிலை ஊர்வலப் பணியில்  2360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் மாவட்டம் நொய்யல், மறவாபாளையம் சேமங்கி பெரியார் நகர், அதியமான் கோட்டை, பாண்டிபாளையம், பொன்னன்சத்திரம், பிரேம்நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, தவிட்டுப்பாளையம், முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், புன்னம்சத்திரம, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், திருக்காடு துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்திகை முன்னிட்டு சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டாரம் பகுதி மற்றும் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் வைக்க வைத்திருந்த 11 விநாயகர் சிலைகளும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 சிலைகளும் என மொத்தம் 38 சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது.

அதேபோல் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 விநாயகர் சிலைகளை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று  தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து கிரேன் மூலம் விநாயகர் சிலைகளை தூக்கி காவிரி ஆற்றுத் தண்ணீரில் இரவு சுமார் 7 மணி முதல் தொடர்ந்து கரைக்கப்பட்டது.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் வன்முறைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் திருச்சி சரக போலீஸ் ஐஜி சந்தோஷ் குமார் தலைமையில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) கண்ணன் மேற்பார்வையில்,  அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலிஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சப்-  இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget