மேலும் அறிய

கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 71 சிலைகள் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடு நடத்தி,  ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் முழுதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார்கள் சார்பில் 277 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 143 சிலைகள் சுவாமி தரிசனம் செய்து, ஆறுகளில் கரைக்கப்பட்டன. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இதன்படி, அரவக்குறிச்சி பகுதியில் 18 சிலைகளும், சின்ன தாராபுரம் பகுதியில் 18 சிலைகளும், வேலாயுதம் பாளையம் பகுதியில் 27 சிலைகளும், குளித்தலை பகுதியில் 8 சிலைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சுவாமி தரிசனம் செய்து, ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. இந்த சிலை ஊர்வலப் பணியில்  2360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் மாவட்டம் நொய்யல், மறவாபாளையம் சேமங்கி பெரியார் நகர், அதியமான் கோட்டை, பாண்டிபாளையம், பொன்னன்சத்திரம், பிரேம்நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, தவிட்டுப்பாளையம், முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், புன்னம்சத்திரம, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், திருக்காடு துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்திகை முன்னிட்டு சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டாரம் பகுதி மற்றும் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் வைக்க வைத்திருந்த 11 விநாயகர் சிலைகளும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 சிலைகளும் என மொத்தம் 38 சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது.

அதேபோல் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 விநாயகர் சிலைகளை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று  தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து கிரேன் மூலம் விநாயகர் சிலைகளை தூக்கி காவிரி ஆற்றுத் தண்ணீரில் இரவு சுமார் 7 மணி முதல் தொடர்ந்து கரைக்கப்பட்டது.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் வன்முறைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் திருச்சி சரக போலீஸ் ஐஜி சந்தோஷ் குமார் தலைமையில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) கண்ணன் மேற்பார்வையில்,  அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலிஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சப்-  இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget