மேலும் அறிய

கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 71 சிலைகள் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடு நடத்தி,  ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் முழுதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார்கள் சார்பில் 277 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 143 சிலைகள் சுவாமி தரிசனம் செய்து, ஆறுகளில் கரைக்கப்பட்டன. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இதன்படி, அரவக்குறிச்சி பகுதியில் 18 சிலைகளும், சின்ன தாராபுரம் பகுதியில் 18 சிலைகளும், வேலாயுதம் பாளையம் பகுதியில் 27 சிலைகளும், குளித்தலை பகுதியில் 8 சிலைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சுவாமி தரிசனம் செய்து, ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. இந்த சிலை ஊர்வலப் பணியில்  2360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் மாவட்டம் நொய்யல், மறவாபாளையம் சேமங்கி பெரியார் நகர், அதியமான் கோட்டை, பாண்டிபாளையம், பொன்னன்சத்திரம், பிரேம்நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, தவிட்டுப்பாளையம், முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், புன்னம்சத்திரம, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், திருக்காடு துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்திகை முன்னிட்டு சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டாரம் பகுதி மற்றும் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் வைக்க வைத்திருந்த 11 விநாயகர் சிலைகளும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 சிலைகளும் என மொத்தம் 38 சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது.

அதேபோல் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 விநாயகர் சிலைகளை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று  தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து கிரேன் மூலம் விநாயகர் சிலைகளை தூக்கி காவிரி ஆற்றுத் தண்ணீரில் இரவு சுமார் 7 மணி முதல் தொடர்ந்து கரைக்கப்பட்டது.


கரூரில் இரண்டாம் நாளாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் வன்முறைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் திருச்சி சரக போலீஸ் ஐஜி சந்தோஷ் குமார் தலைமையில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) கண்ணன் மேற்பார்வையில்,  அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலிஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சப்-  இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
ஆபத்தில் காக்கும் ஆபத்சகாயேஸ்வரர்! சுக்ரீவனுக்கு அருள்புரிந்த தென்குரங்காடுதுறை சிவத்தலம்
ஆபத்தில் காக்கும் ஆபத்சகாயேஸ்வரர்! சுக்ரீவனுக்கு அருள்புரிந்த தென்குரங்காடுதுறை சிவத்தலம்
மறைந்த பொருள்… மருவிய மொழி! பழமொழியா? பிழைமொழியா? ஓர் அலசல்
மறைந்த பொருள்… மருவிய மொழி! பழமொழியா? பிழைமொழியா? ஓர் அலசல்
’ஒருமுறை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு’ மகா பத்ரகாளியின் கோயிலின் பெருமைகள்..!
’துஷ்ட சக்திகளை துரத்தியடிக்கும் காளி’ வடுவூரில் குடமுழுக்கு..!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Embed widget