மேலும் அறிய

vinayagar chaturthi: '32' வடிவங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்...! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை...!!

vinayagar chaturthi: '32' வடிவங்களில் அருள்பாலிக்கும் விநாயகர் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

விநாயகனே...
வினை தீர்ப்பவனே….
வேழ முகத்தோனே...
ஞால முதல்வனே..
 
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே நாம் எந்த காரியத்தை எடுத்தாலும், அதில் முழு முதல் கடவுளாய் நம்மை ஆசீர்வதித்து... நடக்கின்ற காரியங்களை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும் மங்களகரமான  ஞானமூர்த்தி நம் ”விநாயகர்”...!!!

 விநாயகருக்கு  32 விதமான முகங்கள் இருக்கின்றன.  அதன்படி,  'சோடச கணபதி'  என்று 16 வகைகளுடனும்,  அடுத்த ’ஏக விம் சதி’ என்ற 16 வகைகளுடனும் பக்தர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக,  காணக்கிடைக்காத ரூபங்களில் நமக்கு காட்சியளிக்கிறார்.  அந்த சொரூபத்தை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

விநாயகரின் 32 விதமான முகங்கள்

1. பால கணபதி, 
2. தருண கணபதி, 
3. பக்தி கணபதி,
4. வீர கணபதி, 
5. சக்தி கணபதி, 
6. துவிஜ கணபதி,
7. சித்தி கணபதி,
8. உச்சிஷ்ட கணபதி, 
9. விக்ன கணபதி, 
10. க்ஷிப்ர கணபதி, 
11. ஹேரம்ப கணபதி,
12. லட்சுமி கணபதி,
13. மகா கணபதி, 
14. விஜய கணபதி, 
15. நிருத்த கணபதி,
16. ஊர்த்துவ கணபதி,
17. ஏகாட்சர கணபதி, 
18. வர கணபதி, 
19. த்ரயக்ஷர கணபதி, 
20. சிப்ரப்ரசாத கணபதி, 
21. ஹரித்ரா கணபதி, 
22. ஏகதந்த கணபதி, 
23. சிருஷ்டி கணபதி, 
24. உத்தண்ட கணபதி, 
25. ருணமோசன கணபதி,
26. துண்டி கணபதி, 
27. துவிமுக கணபதி, 
28. மும்முக கணபதி,
29. சிங்க கணபதி, 
30. யோக கணபதி, 
31. துர்க்கா கணபதி, 
32. சங்கடஹர கணபதி

32 முகங்களின் விவரங்கள்:

1.  பாலகணபதி

உருவத்தில் குழந்தை போல காட்சியளிப்பார். சிவந்த  நிறத்தில்  கையில் வாழைப்பழம்,  பலாப்பழம், கரும்பு, மாம்பழம் ஆகியவற்றை தன் ’நான்கு’ கரங்களில்  ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கிறார்.

2. தருண கணபதி

கையில் பாசம், அங்குசம், கரும்புத் துண்டு, ஒடிந்த தந்தம்,  மோதகம், விளாம்பழம், நெற்கதிர்கள், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரத்தில் ஏந்தியவர், சிவப்பு நிற திருமேனியோடு நமக்கு காட்சி அளிக்கிறார்.

3. பக்தி கணபதி

வெண்ணிற மேனியோடு நமக்கு காட்சி அளிக்கும் பக்தி கணபதி தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயாசக் கிண்ணம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் வைத்திருப்பவராக அமர்ந்திருக்கிறார்.

4. வீர கணபதி:

வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை  தன்னுடைய 16 திருக்கரங்களில் ஏந்தியவாரு காட்சியளிக்கும் வீர கணபதி, சிவந்த திருமேனியை உடையவர்.

5. சக்தி கணபதி :

மஹா சக்தியை உடையவரான சக்தி கணபதி, சிவந்த நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.  பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். 

6. துவிஜ கணபதி :

தன் திருக்கரங்களில் அட்சமாலை, புத்தகம், தண்டம், கமண்டலம்,  ஆகியவற்றை ஏந்தியவராக இருப்பவர் துவிஜ கணபதி. 4 முகங்களுடன் வெண்மையான திருமேனியை உடையவாராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

7. சித்தி கணபதி :

 தன் துதிக்கையில் மோதகத்தை ஏந்தியவராக,  பசுமையுடன் பொன் நிறம் கலந்த சித்தி விநாயகர்,  பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

8. உச்சிஷ்ட கணபதி :

பெண்ணின் திருமேனியில் தன் துதிக்கையை வைத்து காட்சியளிக்கும் உச்சிஷ்ட கணபதி,  நீல நிறமுடையவர். இரண்டு கரங்களில் நீலோத்பவ மலர்களும், மற்றதில் மாதுளம் பழம், நெற்கதிர், அட்சமாலை, வீணை ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியவர் 6 கரங்களை உடையவர்.


 9. விக்ன கணபதி :

சக்கரம், சங்கு, கோடாரி, கரும்பு வில், புஷ்ப பாணம், ஒடிந்த தந்தம், பாணம், பூங்கொத்து, புஷ்ப பாணம், மாலை, பாசம், ஆகியவற்றை தன் 10 திருக்கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கும் விக்ன கணபதி, பொன்னிற திருமேனியை உடையவர்.

10. ஷிப்ர கணபதி :

ஷிப்ர கணபதி  ஒடிந்த தந்தம், பாசம், கற்பகக் கொடி, அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தியவராக, ரத்ன கும்பத்தை துதிக்கையில் வைத்து, சிவந்த மேனியை உடையவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

11. ஹேரம்ப கணபதி:

ஹேரம்ப கணபதி தனது 10 கரங்களில் இரண்டு கரத்தில் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையோடும்,மீதமுள்ள கரங்களில் பரசு, பாசம், தந்தம், சம்மட்டி, மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவர் ஐந்து முகங்களை கொண்டவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

12. லட்சுமி கணபதி :

கற்பகக் கொடி, கலசம், அங்குசம், பாசம், கட்சம், கிளி, வரதம், மாதுளம் பழம் ஆகியவற்றை தனது 8 திருக்கரங்களில் ஏந்தியவர், நீல நிற தாமரைப் பூவை தனது கையில் வைத்திருப்பவர். மேலும் இரு தேவிகளுடன் காட்சியளிக்கும் லட்சுமி கணபதி வெண்மை நிறமுடையவர்.

13. மகா கணபதி :

பத்து கைகளையும், 3 கண்களையும், முடியில் பிறைச்சந்திரனை உடையவர் நம் மகா கணபதி...
தாமரை மலரை ஏந்திய தேவியை தனது இடது தொடையில் அமரவைத்து அருள் பாலிக்கும் கணபதி. கரங்களில் கரும்பு, வில், கதை, பாச, சக்கரம், தந்தம், ரத்ன கலசம்,மாதுளை நெற்கதி, நீலோத்பலம், ஆகியவற்றை ஏந்தி இருப்பாவராக நமக்கு காட்சி அளிக்கிறார். சிவப்பு நிற திருமேனியை உடையவர்.

14. விஜய கணபதி :

பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்.

15. நிருத்த கணபதி :

கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நிருத்த கணபதி...  பொன் நிற திருமேனியை உடையவர். , அங்குசம், பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் தன் 6 திருக்கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார். இவரை நாம் கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பதுண்டு.

16. ஊர்த்துவ கணபதி :

 தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கியவராக விளங்கும் ஊர்த்துவ கணபதி தங்கம் போல் ஜொலிக்கும் திருமேனியை உடையவர். மேலும் பச்சை நிறமுடைய தேவையை அணைத்தவாறு, பணாம், தந்தம், கரும்பு, தாமரை, வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தியவராக காட்சி அளிக்கிறார்... 

17. ஏகாட்சர கணபதி :

பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நமக்கு காட்சி அளிக்கும் ஏகாட்சர கணபதி, செம்மலர் மாலையை அணிந்து , முடியில் பிறைச்சந்திரனை சூடி, மூன்று கண்களும், செந்நிற திருமேனியுடன் நமக்கு அருள் பாலிக்கிறார்.

18. வர கணபதி:

பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு... அதேபோல செந்நிற திருமேனியை உடைய வரகணபதி, தனது 4 கரங்களில் அங்குசம், பாசம், அமுதக்கிண்ணம், கொடியை தாங்கி இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார். 

19. திரயாக்ஷர கணபதி:

 பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கும் இவர் பொன்னிற திருமேனியை உடையவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

20. க்ஷிப்ரபிரசாத கணபதி :

தனது 6 திருக்கரங்களில் தர்ப்பை, பாசம், தாமரை,  அங்குசம் ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும் கொண்ட இவர் பெரிய வயிற்றினை கொண்டவர். அதேபோல துதிக்கையில் மாதுளம் பழத்தையும், திருமேனி முழுவதும் ஆபரணங்களையும் சூடி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

21. ஹரித்ரா கணபதி:

மங்களகரமாக மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிக்கும் ஹரித்ரா கணபதி, அங்குசம், பாசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை தன்னுடைய நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார்.

22. ஏகதந்தி கணபதி:

நீல நிற திருமேனியை உடைய ஏகாந்த கணபதி கையில் கோடரி, தந்தம், அட்சமாலை, லட்டு ஆகியவற்றை ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்.

23. சிருஷ்டி கணபதி:

செந்நிற திருமேனியையுடைய சிருஷ்டி கண்பதி தன் நான்கு திருக்கரங்களில் அங்குசம், பாசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவராக... பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

24. உத்தண்ட கணபதி:

 பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை தனது பத்து திருக்கரங்களில் வைத்திருப்பவராக அருள்பாலிக்கும் உத்தண்ட கணபதி.  இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

25. ரணமோசன கணபதி:

செந்நிறப் பட்டாடை உடுத்திய நம் ரணமோசன கணபதி வெண்பளிங்கு திருமேனியுடையவர்.  தன் திருக்கரங்களில், அங்குசம், பாசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

26. துண்டி கணபதி:

தன்னுடைய 4 கரங்களில் ரத்ன கலசம்,கோடரி அட்சமாலை இவைகளோடு ஒடிந்த தந்தத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் துண்டி கணபதி மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

27. துவிமுக கணபதி:

 பசுமையான நீல நிறமுடையவர் துவிமுக கணபதி...  செம்பட்டாடை உடுத்தியவராக... தன்னுடைய 4 திருக்கரங்களில் பாசம், தந்தம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்.

28. மும்முக கணபதி:

பொற்றாமரை ஆசனத்தில்  அமர்ந்து 3 முகத்துடன் நமக்கு காட்சியளிக்கும்  மும்முக கணபதி . சிவந்த மேனியை உடையவர். தன்னுடைய கைகளில் அங்குசம், பாசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியவராக நமக்கு அருள்பாலிக்கிறார்.

29. சிங்க கணபதி:

வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் சிங்க கணபதி, தனது 6 திருகரங்களில், கற்பகக் கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியவர், தனது இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும் ஏந்தியவராக நமக்கு அருள்பாலிக்கிறார். இவர் சிங்கத்தை வாகனமாக கொண்டவர். 

30. யோக கணபதி:

 நீல நிற ஆடையை தரித்தவரான யோக கணபதி... சிவந்த நிறமுடையவர்...  கைகளில் பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் நமக்கு அருள்பாலிக்கிறார்.

31. துர்க்கா கணபதி:

துர்கா கணபதி தன் எட்டு திருக்கரங்களில் பாசம், அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம்,கொடி, வில், நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் இவர் பொன்னிறமுடையவர்.

32. சங்கட ஹர கணபதி:

தன்னுடைய இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியோடு காட்சியளிக்கும் சங்கட ஹர கணபதி. நீல நிற ஆடை அணிந்தவறாக செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், பாசம், அங்குசம்,பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Embed widget