மேலும் அறிய

பழனி முருகன் கோயில் நவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டு நடைபெறுகிறது.

பழனி முருகன் கோயில் நவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

இதேபோல் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் பல்வேறு பொம்மைகளை கொண்டு கொலு வைக்கப்படுகிறது. அதோடு விழாவையொட்டி தினமும் பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம் 4-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பழனி முருகன் கோயில் நவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்கிறார். அங்கு மாலை 6 மணிக்கு வில்அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


பழனி முருகன் கோயில் நவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

பழனி முருகன் கோவிலில் திருவிழா காலங்களில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறும் போது தலா 5 நாட்கள், சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை ஆகிய திருவிழாக்களில் தலா 1 நாள் மற்றும் நவராத்திரி விழாவில் 9 நாட்கள் என மொத்தம் 21 நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் அக்டோபர் 4-ந்தேதி வரை 9 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பாக கூறப்படுகிறது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Embed widget