மேலும் அறிய

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்.. பார்த்தால் அசந்து விடுவீர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 20000 விநாயகர்களுடன் நடைபெறும் விநாயகர் கண்காட்சி

சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கட்டிடக்கலை நிபுணர் சீனிவாசன். விநாயகரின் தீவிர பக்தர் ஆன இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகளைக் கொண்ட கண்காட்சியை நடத்தி வருகிறார். தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் உள்ள மண்டபத்தில் இவரது கண்காட்சி நேற்று தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்.. பார்த்தால் அசந்து விடுவீர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!
 
இந்த கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன் இரும்பு கண்ணாடி போன்றவற்றிலான அனைத்து வகை விநாயகர் சிலைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்.. பார்த்தால் அசந்து விடுவீர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!
 
கண்காட்சியில் பல வகை விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சொர்க்க வாசல் விநாயகர் கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்றும் ஸ்கூட்டர் சைக்கிள் கார் ரயில் ஓட்டும் விநாயகர் சிலைகளும் இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் வடிவத்தில் விநாயகர் சிலைகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்.. பார்த்தால் அசந்து விடுவீர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!
 
நர்த்தன கணபதி காசியானந்த கணபதி பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சுமார் 20000 விநாயகர் சிலைகள் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் கோயில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
 

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்.. பார்த்தால் அசந்து விடுவீர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!
 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்காட்சி நடைபெறாத நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் விநாயகர் சிலைகள் கண்காட்சி நடைபெறுவது விநாயகர் பக்தர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 
 
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள புதிய  ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
 
மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் திருஉருவ சிலைகளை நிறுவி பொதுமக்கள் வழிபாடு, விழாகோலம் பூண்டது காஞ்சி மாநகரம். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வாண்டு எவ்வித கட்டுபாடுகளுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் திருஉருவ சிலைகளை நிறுவி கொண்டாடிட தமிழக அரசானது அனுமதி வழங்கிய நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்.. பார்த்தால் அசந்து விடுவீர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!
 
அந்த வகையில் கோயில் நகரம் என்று சொல்லப்படகூடிய காஞ்சிபுரத்தில் அங்காங்கே விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெருவிலுள்ள ஏலேலோ சிங்க சிங்க விநாயகர் கோயிலில் காலை அபிஷேகமானது நடைபெற்று வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளினால் கருவறை முழுவதும் மொத்தம் 15 லட்சம் ரூபாயில் அலங்கரிக்கப்பட்டு ஏலேலோ சிங்க விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனையெடுத்து புதிய ரூபாய் நோட்டுகளினால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஏலேலோ சிங்க விநாயக பெருமானை பொதுமக்கள் மனமுறுகி வணங்கி வழிபட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget