மேலும் அறிய

சபரிமலையை மிஞ்சும் அளவிற்கு சேலத்தில் ஐயப்பன் ஆராதனை விழா

கதகளி, செண்டைமேளம், சிவவாத்தியங்கள் உள்ளிட்டவைகளை கண்டு பக்தர்கள் பக்திபரவசத்தில் ஆழ்ந்தனர். 50 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலை எழுந்து நின்று நடனமாடியது பக்தர்களை கண்டு வியந்தனர்.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் 41வது ஆண்டு சபரிமலை யாத்திரையை ஒட்டி ஐயப்பன் ஆராதனை மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை ஸ் ரீசாஸ்தா சேவா சமிதி மற்றும் ஆரியவைசிய ஸ்ரீ ஐயப்ப பூஜா மண்டலி ஆகியவை இணைந்து நடத்தினர். இதனையொட்டி கேரள மாநிலத்தில் நடைபெறுவது போன்று மிகப் பிரமாண்டமான ஆராட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. மயிலாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த ஆராட்டு விழாவில் 17 வாகனங்களில் பல்வேறு வகையான தெய்வங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு திரு வீதி உலா நடைபெற்றது. விநாயகர், முருகன், சிவன், அண்ணாமலையார், உண்ணாமலையார், பாபா ராம்தேவ் ஜி, பெருமாள், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடவுள்கள் அலங்காரத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சிவவாந்தியங்கள், நாதஸ்வரம், கொப்பரை வாத்தியம், நாதர்கள், சங்கு முழங்க பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

சபரிமலையை மிஞ்சும் அளவிற்கு சேலத்தில் ஐயப்பன் ஆராதனை விழா

ஒவ்வொரு அலங்காரத்திற்கு இடையே கேரளா செண்டை மேளங்கள் மற்றும் கேரள கதக்களி போன்ற நடனங்களும் இடம்பெற்றது. நிகழ்ச்சிகள் பங்கேற்ற ஒவ்வொரு அலங்காரமும் பார்வையாளர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது. திருப்பதி, திருவண்ணாமலை, முத்துமலை முருகன், சமயபுரம், மாரியம்மன் கோவில்களில் வீற்றிருக்கும் அலங்காரங்களை போன்று தத்துவமாக அலங்காரங்கள் செய்யப்பட்டு காட்சிபடுத்தப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் குதிரைகள், யானை காளைமாடு, பசுமாடு, போன்றவை ஊர்வலத்தில் இடம்பெற்றன. ஊர்வலத்தில் இறுதியாக ஐயப்பன் புலி வாகனத்தில் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டு கேரளாவில் நடைபெறவது போன்று ஐயப்பனை யானை மீது சுமந்து திரு வீதி உலாவரும் நிகழ்வை தத்துவமாக சேலத்தில் காட்சிப்படுத்தியது பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது. 

சபரிமலையை மிஞ்சும் அளவிற்கு சேலத்தில் ஐயப்பன் ஆராதனை விழா

இந்த ஊர்வலம் செவ்வாய்பேட்டை, சந்தை பேட்டையில் இருந்து துவங்கி செவ்வாய்பேட்டையில் பஜார் வழியாக பல மணி நேரம் வந்து இறுதியாக கன்னிகா பரமேஸ்வரி கோவிலை அடைந்தது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அனைத்து இறைவனின் ஆசியையும் பெற்று சென்றனர். கேரளாவில் நடைபெறும் ஐயப்பனின் ஆராட்டு விழாவை போன்று சேலத்தில் ஆராட்டு விழாவை நடத்திக் காட்டியது ஐயப்ப பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்த ஆண்டு முதன் முறையாக சேலத்தில் சபரிமலைகள் நடப்பது போல ஐயப்பனுக்கு சிறப்பு விழா நடத்தப்பட்டது. சபரிமலைக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பக்தர்களுக்கு சேலத்தில் இதுபோன்று நடந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் கூறினார். மேலும் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
Embed widget