மேலும் அறிய

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர்  ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு ஒரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனை தரிசனம் செய்ய வந்தார். அப்போது மன்னர் வந்ததை கூட கவனிக்காமல் மன்னருக்கு உடைய மரியாதை செய்யாமல் அபிராமி பட்டர் தியான நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட சரபோஜி மன்னர் அருகில் இருந்தவர்களில் இவர் யார்? என்று கேட்டார். அப்போது அவர்கள் அபிராமி பட்டரை பற்றி அவதூறாக அவர்கள்  மன்னரிடம் கூறியுள்ளார். 


திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

ஆனால், சரபோஜி மன்னர், அவர்களின் வார்த்தைகளை நம்பாமல், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய சரபோஜி மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அதற்கு, அம்பிகையின் தியான நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் தவறி பவுர்ணமி என கூறியுள்ளார். அமாவாசையை, பவுர்ணமி என்று தவறுதலாக கூறியதால் மன்னர் சினம் கொண்டார். அதனை தொடர்ந்து அபிராமி பட்டர், ‘உதிக்கின்ற செங்கதிர்‘ என்று ஆரம்பிக்கும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். இதில் 79 -வது பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றியதாக புராணங்கள் செல்லப்படுகிறது.


திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

இந்த சிறப்புமிக்க நிகழ்வுவை ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை அன்று அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழாவாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி  தை மாத அமாவாசை தினமான நேற்றிரவு ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடினர். அப்போது ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்யப்பட்டது. மேலும் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.  

Republic Day parade: டெல்லியில் குடியரசு தின விழாவுக்கு செல்கிறீர்களா? மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம்..! முழு விவரம்


திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Intranasal Vaccine: குடியரசு தினத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து


திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள அபிராமி அம்மனுக்கு தை அமாவாசையையொட்டி பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி திருக்கடையூர் ஆணைக்குளத்து கரையில் அமைந்துள்ள எதிர்காளஸ்வரர் கோயிலில் இருந்து 1008 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அமிர்தகடேஸ்வரர் கோயிலை அடைந்தனர். அங்கு அபிராமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Praggnanandhaa: நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
Chennai Airport: பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை..  டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை.. டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Priyanka Gandhi slams Modi : ”என்ன மோடி இதெல்லாம்? அதானி கையில் முடிவு” ஆவேசமான பிரியங்காEPS ADMK Election plan : SILENT MODE-ல் அதிமுக! மௌனம் காக்கும் EPS... காரணம் என்ன?Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Praggnanandhaa: நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
Chennai Airport: பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை..  டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை.. டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Modi On Gandhi: ”படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது” - மோடியின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது - மோடியின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
Watch Video: நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா.. இதே வேலையா போச்சு என ரசிகர்கள் கண்டனம்!
நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா.. இதே வேலையா போச்சு என ரசிகர்கள் கண்டனம்!
Kerala Rains Video: முன்கூட்டியே கேரளாவை எட்டிய பருவமழை.. கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பொதுமக்கள்..!
முன்கூட்டியே கேரளாவை எட்டிய பருவமழை.. கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பொதுமக்கள்..!
Embed widget