மேலும் அறிய

Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!

Aadi Pooram 2025 Date: அம்மனுக்கு மிகவும் உகந்த ஆடிப்பூரம் எப்போது? அப்படி என்ன சிறப்புகள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Aadi Pooram 2025 Date in Tamil: ஆடி மாதம் என்றாலே மிகுந்த ஆன்மீக மனம் கொண்ட மாதமாக உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளை ஆடிப்பூரம் என்று பக்தர்கள் கொண்டாடுகின்றனர். 

ஆடிப்பூரம் எப்போது?

இந்த ஆடிப்பூரமான பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளை போற்றும் நாளாக ஆண்டாள் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியின் அவதாரமாகவே ஆண்டாள் போற்றப்படுகிறார். அந்த ஆண்டாள் ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்திலே அவதரித்ததாக கருதப்படுகிறது. 


Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!

நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம் வரும் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு மிகவும் உகந்த திங்கட்கிழமையில் ஆடிப்பூரம் வருகிறது. ஜுலை 27ம் தேதி மாலை 6.55 மணிக்கு பூரம் நட்சத்திரம் பிறக்கிறது. ஒரு நாள் சூரிய உதயத்தின்போது என்ன திதி இருக்கிறதோ, அந்த திதியே அந்த நாளில் கணக்கில் கொள்ளப்படும். அதன்படி, 28ம் தேதி சூரிய உதயத்தில்தான் பூரம் நட்சத்திரம் கணக்கில் வருகிறது. இதனால், ஆடிப்பூரம் வரும் 28ம் தேதிதான் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

பூரம் நட்சத்திரம் 27ம் தேதி தொடங்கி 28ம் தேதி இரவு 8 மணி வரை உள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளான திங்கட்கிழமை மட்டுமின்றி விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதியிலும் வருகிறது. சிவன், விநாயகர், ஆண்டாள் ஆகிய மூன்று பேருக்கும் உகந்த நாளாக இந்த நாள் வருகிறது. 

என்ன சிறப்புகள்?

திருமாலைப் போற்றிய பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாள் அவதரித்த நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. ஆண்டாள் ஜெயந்தியாக கருதப்படும் இதே ஆடிப்பூர நன்னாளில்தான் தேவலோகத்தில் அனைத்து தேவியருக்கும் வளைகாப்பு விழா நடத்தப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.


Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!

 

பங்குனி உத்திரத்தில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற பிறகு இந்த வளைகாப்பு விழா நடத்தப்பட்டதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது. மேலும், இதே நாளில்தான் பார்வதி தேவி பூமியில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஆடி மாதமே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கொண்டாடப்படும் நிலையில், ஆடிப்பூரம் அம்மனுக்கு மிகவும் உகந்த நன்னாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோயில்களும் விழாக்கோலம்  பூண்டிருக்கும். பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும். 

அம்மனுக்கு வளைகாப்பு:

இந்த நாளில் அம்மனுக்கு கோயில்களில் வளைகாப்பு நடத்தப்படும். இந்த வளைகாப்பில் சாற்றப்பட்ட வளையல்கள் திருமணமான பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வளையல்களை அணிவதாலும், வீட்டில் வைத்து வழிபடுவதாலும் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். 

மேலும், ஆடிப்பூரம் நன்னாளில் அம்மனுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் வைத்தும், சில இடங்களில் ரூபாய் நோட்டுக்கள் வைத்தும் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நாளில் அம்மனுக்கு பட்டாடைகளை பக்தர்கள் சாற்றி தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்துவார்கள். சிறப்பு அர்ச்சனைகளும், பூஜைகளும் நடக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் இந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget