மேலும் அறிய

Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!

aadi perukku 2025 date:தமிழர்களின் முக்கியமான பண்டிகையான ஆடிப்பெருக்கு எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.

ஆடி மாதம் என்றாலே அதில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் நாட்களிலே ஆடிப்பெருக்கு மிக மிக முக்கியமான நாள் ஆகும்.  ஆடி மாதம் 18ம் தேதியே ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. 

ஆடிப்பெருக்கு எப்போது?

நடப்பாண்டில் ஆடிப்பெருக்கு எனும் ஆடி 18 வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நாளில் இந்த சிறப்பு வாய்ந்த நாள் வருகிறது. அந்த நாளில் விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரம் இணைந்து வருகிறது. இது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அனுஷம் நட்சத்திரம் சனி பகவானுக்கு மிகவும் உகந்தது என்பதால் இந்த நன்னாளில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். 

ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது?

ஆடிப்பெருக்கு தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த ஆடிப்பெருக்கு குறித்து பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நன்னாளில்தான் விவசாயிகள் விவசாய பணிகளைத் தாெடங்குவார்கள். அதையே ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியாகவும் கூறியுள்ளனர். 


Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!

மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும் இந்த சமயத்தில் விவசாயிகள் நாற்று நடவும் பணியை இந்த ஆடிப்பெருக்கில்தான் தொடங்குவார்கள். இந்த நாளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணியைத் தொடங்குவதாலே இந்த நாளை தமிழர்கள் தங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாக கொண்டாடுகிறார்கள். 

கோலாகல கொண்டாட்டம்:

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு நன்னாளில் தாலிக்கயிறு மாற்றுதல் வைபோகமும் நடக்கும். புதியதாக திருமணம் செய்த தம்பதியினர் இந்த நாளில் புது தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். 


Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!

மேலும், புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ரங்கநாதர் சுவாமி அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு இந்த நாளில் எழுந்தருள்வார். காவிரி ஆற்றில் எழுந்தருள் ரங்கநாத சுவாமி சார்பில் புடவை, பாக்கு, ஆபரணங்கள், வெற்றிலை அனைத்தும் வைத்து காவிரி ஆற்றுக்கு சீர் கொடுக்கும் வைபோகமும் அரங்கேறும். ரங்கநாதர் எழுந்தருளும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி கரையோரத்தில் குவிவார்கள். 

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் இந்த நாளில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடப்பதால் பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த நன்னாளில் காவிரி ஆற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீராடுவார்கள். இதனால், பாவங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும். 

புராணம் சொல்வது என்ன?

பலரும் பாவங்களை போக்கிக் கொள்ளும் கங்கை கிருஷ்ணரிடம் சென்று தன்னுடைய பாவத்தை எப்படி நீக்குவது? என்று வேண்டி கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு கிருஷ்ண பகவான் காவிரி ஆற்றில் கலக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. பகவான் விஷ்ணு மகிழ்ச்சியாக காட்சி தரும் ஸ்ரீரங்கம்,  ஸ்ரீரங்கப்பட்டினம் சிவ சமுத்திரம் ஆகிய இடங்களுக்குச் சென்று ரங்கநாதரை வணங்கியது. இதுவே ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
Lord Shani Dev: சனிப்பெயர்ச்சியால் பாதிப்பா? - 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கோயில்கள்!
Lord Shani Dev: சனிப்பெயர்ச்சியால் பாதிப்பா? - 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கோயில்கள்!
காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Embed widget