மேலும் அறிய
Chettinad Mushroom Biryani: சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி எளிதாக செய்யலாம் - ரெசிபி!
Chettinad Mushroom Biryani: சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காளான் பிரியாணி
1/8

காளானை நன்றாக கழுவி எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
2/8

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
3/8

இதில் நறுகிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா உள்ளிட்டவற்றையும் சேர்த்து, வதக்க வேண்டும்
4/8

அதோடு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
5/8

தக்காளி நன்கு வதங்கியதும், காளானை சேர்த்து பிரட்ட வேண்டும்
6/8

அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, சோம்பு பொடி, தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
7/8

மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியைக் கழுவி சேர்த்து, அதனுடன் 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்ட பின் இறக்க வேண்டும்.
8/8

இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி தயார். ( பாசுமதி அரிசி விரைவில் வேக கூடியதாக இருந்தால் இரண்டு விசில் போதுமானது)
Published at : 20 Dec 2023 09:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement