மேலும் அறிய
Paneer Peas: சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
சுவையான பனீர் பட்டாணி கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பனீர் பட்டாணி கிரேவி
1/6

பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2/6

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3/6

அதே கடாயில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
4/6

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
5/6

அனைத்தும் நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
6/6

பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி.
Published at : 15 Jan 2024 07:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion