மேலும் அறிய

பாகிஸ்தானில் வறுமையில் சிக்கி தவிக்கும் 9.5 கோடி மக்கள் - உலக வங்கி எச்சரிக்கை

மோசமான பொருளாதார நிலையும் நிலையற்ற அரசியல் சூழலும் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது.

பாகிஸ்தானில் நிகழும் அரசியல் மாற்றங்கள், இந்தியாவில் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அண்டை நாடு என்பதாலும் வரலாற்று ரீதியாகவும் முக்கியமான நாடு என்பதால், அங்கு நிகழும் அரசியல் மாற்றங்களுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் தரும். அந்த வகையில் வரும் ஜனவரி மாதம், அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலை: 

மோசமான பொருளாதார நிலையும் நிலையற்ற அரசியல் சூழலும் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது. எனவே, வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேர்தல், அந்நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி பரபரப்பு தகவல்களை பகிர்ந்துள்ளது. மோசமான பொருளாதார சூழல்களால் பாகிஸ்தானின் வறுமை 39.4 சதவிகதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி வரவிருக்கும் அரசாங்கத்தை உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

"12.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்"

"பாகிஸ்தானின் வறுமை ஒரு வருடத்திற்குள் 34.2 சதவிகிதத்தில் இருந்து 39.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், 12.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். ஒரு நாளுக்கு 3.65 டாலர்களுக்கு குறைவாக வருமானம் பெறுகின்றனர். சுமார் 9.5 கோடி பாகிஸ்தானியர்கள் இப்போது வறுமையில் வாழ்கின்றனர்" என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக், இதுகுறித்து கூறுகையில், "பாகிஸ்தானின் பொருளாதார மாதிரி இனி வறுமையைக் குறைக்காது. வாழ்க்கைத் தரம் சக நாடுகளுக்குப் பின்னால் வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தானின் இன்றைய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார மற்றும் மனித வள நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. மேலும் பெரிய கொள்கை மாற்றங்கள் தேவைப்படும் கட்டத்தில் உள்ளது"  என்றார்.

உலக வங்கி யோசனை:

பாகிஸ்தானில் அமைய உள்ள புதிய அரசாங்கத்திற்காக அனைத்து பங்குதாரர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கை குறிப்புகளை உலக வங்கி வெளியிட்டது. அதில், பல முக்கிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் மீது அரசு வரி விதிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும் என யோசனை வழங்கப்பட்டுள்ளது.

மனித வளம், நிலையில்லாத நிதி நிலைமை, அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் துறை, விவசாயம், எரிசக்தி ஆகிய துறைகளில் புதிய அரசாங்கம் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது. வரி - மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை உடனடியாக 5% அதிகரிக்கவும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செலவினங்களை 2.7% குறைக்கவும் உலக வங்கி யோசனை வழங்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget