![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video | கொதித்த சூப்பால் கொதித்துப்போன பெண்! : அடுத்து என்ன காரியம் செய்தார் தெரியுமா?
ஆன்லைனில் ஆர்டர் செய்த சூப் அவர் வீட்டுக்குக் கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்துள்ளது. ‘இவ்வளவு சூடான சூப்பை நீங்கள் எப்படி கஸ்டமர்களுக்குத் தரலாம்?’ என அந்த ஹோட்டலுக்கு அழைத்துக் கேட்டுள்ளார்.
![Watch Video | கொதித்த சூப்பால் கொதித்துப்போன பெண்! : அடுத்து என்ன காரியம் செய்தார் தெரியுமா? Woman to be charged for throwing hot soup at restaurant worker in attack caught on camera Watch Video | கொதித்த சூப்பால் கொதித்துப்போன பெண்! : அடுத்து என்ன காரியம் செய்தார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/00c40a169c5c5a635d902305c2cf1b3c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெம்பிள் என்னும் நகரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெம்பிள் நகரத்தில் உள்ள பிரபல ஹோட்டல் சோல் டி சொல்ஜிகோ இந்த ஹோட்டலுக்கு அண்மையில் தனது நண்பருடன் வந்த ஒரு பெண் அங்கே இருந்த மேனேஜர் முகத்தில் தன் கையில் வைத்திருந்த சூடான சூப்பை கொட்டியுள்ளார். இது அந்த ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
டெம்பிள் நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருந்த சோல் டி சொல்ஜிகோ என்னும் ஹோட்டலில் சூப் ஒன்ரை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்த சூப் அவர் வீட்டுக்குக் கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்துள்ளது. ‘இவ்வளவு சூடான சூப்பை நீங்கள் எப்படி கஸ்டமர்களுக்குத் தரலாம்?’ என அந்த ஹோட்டலுக்கு அழைத்துக் கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் தரப்பில் சரிவர விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கூடவே ஹோட்டல் மேலாளரிடம் பேசவும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து கோபமடைந்த அந்தப் பெண் சூடான சூப்புடன் ஹோட்டலுக்கு விரைந்துள்ளார். அங்கிருந்த மேலாளரிடம் அவர் வாக்குவாதம் செய்வதும் அதற்கு அந்த மேலாளர் பதில் அளிப்பதும் அதை அடுத்து அவர் முகத்தில் அந்த கஸ்டமர் சூப்பைக் கொட்டுவதும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மேலாளர் இதுகுறித்துக் கூறுகையில், ‘அந்தப் பெண் தகாத வார்த்தைகளை உபயோகித்தார்.நான் போலீசை அழைப்பேன் எனக் கூறியதும் என் முகத்தில் சூப்பை வீசினார். எனது முகம் எரியத் தொடங்கியது’ எனக் கூறியுள்ளார்.இதையடுத்து சூப்பை வீசிய பெண் சிறைபடுத்தப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் கேரன் என்பதும் இனி கேரன் அந்த ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்றும் ஹோட்டல் நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளது.
View this post on Instagram
புறாவுக்கு போரா? அக்கப்போரால்ல இருக்கு என்னும் கதையாக மாறியுள்ளது இந்த சூப் சம்பவம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)