மேலும் அறிய

Modi Vs Trump: என்ன விளையாடுறீங்களா.? பொய் சொல்றது மோடியா.? ட்ரம்ப்பா.? பாக். போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு

இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறிவரும் ட்ரம்ப், தற்போது அதனுடன் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தையும் சேர்த்து கூறியுள்ளார். இதில் யார் சொல்வது பொய்.?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உட்பட உலகளாவிய மோதல்களைத் தீர்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பெருமை பேசியுள்ளார். தனது ஆசிய பயணத்திற்கு முன்னதாக ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது ரஷ்யா மற்றும் உக்ரைனை விட கடினமானதாக இருக்கும் என்று தான் நினைத்ததாகக் கூறினார். மேலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலும் நிறுத்துவதாக உறுதியளித்திருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியா-பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதை விட கடினமாக இருக்கும் என தான் நினைத்த பல போர்களை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கூறினார். அதில் இந்தியா-பாகிஸ்தான் போர் போல பலவற்றை கூற முடியும் என தெரிவித்த அவர், தான் நினைத்ததைவிட ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது கடினமாக உள்ளதாகவும், சவாலானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வாஷிங்டனின் மத்தியஸ்தத்தால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "முழுமையான மற்றும் உடனடி" போர்நிறுத்தத்தைப் பெற உதவியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில், அவர் தனது வரி அச்சுறுத்தல்களை உண்மையான சமாதானம் செய்பவர் என்று கூறி,யதுடன், அவ்வாறு கூறவில்லையென்றால் 8 உலகளாவிய மோதல்களை "தீர்க்க" முடியாது என்றும் கூறினார்.

ட்ரம்ப்பின் கூற்றை மறுத்துவரும் இந்தியா

ட்ரம்ப் இவ்வாறு கூறிவரும் நிலையில், இந்தியா பலமுறை அவரது கூற்றை நிராகரித்து, மறுப்பு தெரிவித்து வருகிறது. எந்த ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் இல்லாமல், நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தை மீண்டும் கூறிய ட்ரம்ப்

இதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிடும் என்ற தனது கூற்றையும் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 

ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து பேசிய அவர், "இந்தியா முற்றிலுமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. சீனா ரஷ்ய எண்ணெய் வாங்குவது பற்றி நான் ஷி ஜின்பிங்குடன் விவாதிக்கலாம்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.

மேலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியை அவர் முன்னர் மேற்கோள் காட்டினார். "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் இருக்காது என்று அவர்(மோடி) எனக்கு உறுதியளித்துள்ளார். அவரால் அதை உடனடியாகச் செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்" என்று அவர் கூறியிருந்தார்.

எண்ணெய் இறக்குமதி தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் இந்தியா மறுத்துள்ளது. நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா தெளிவாக கூறியுள்ளது.

யார் சொல்வது பொய்.?

இந்நிலையில், ட்ரம்ப் தற்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியது, ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்காது என மோடி உறுதியளித்திருப்பதாக கூறியது என இந்த இரண்டு விஷயங்களையும் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், இந்தியா அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த சூழலில், யார் சொல்வது பொய் என்று மக்கள் குழம்பிப் போய் உள்ளனர். இரு தரப்புமே மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக கூறி வருவது, பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
Rain Alert: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? முழு விவரம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? முழு விவரம்
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! அமீபா காய்ச்சல் எச்சரிக்கை: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! அமீபா காய்ச்சல் எச்சரிக்கை: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
Embed widget