மேலும் அறிய

Modi Vs Trump: என்ன விளையாடுறீங்களா.? பொய் சொல்றது மோடியா.? ட்ரம்ப்பா.? பாக். போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு

இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறிவரும் ட்ரம்ப், தற்போது அதனுடன் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தையும் சேர்த்து கூறியுள்ளார். இதில் யார் சொல்வது பொய்.?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உட்பட உலகளாவிய மோதல்களைத் தீர்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பெருமை பேசியுள்ளார். தனது ஆசிய பயணத்திற்கு முன்னதாக ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது ரஷ்யா மற்றும் உக்ரைனை விட கடினமானதாக இருக்கும் என்று தான் நினைத்ததாகக் கூறினார். மேலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலும் நிறுத்துவதாக உறுதியளித்திருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியா-பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதை விட கடினமாக இருக்கும் என தான் நினைத்த பல போர்களை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கூறினார். அதில் இந்தியா-பாகிஸ்தான் போர் போல பலவற்றை கூற முடியும் என தெரிவித்த அவர், தான் நினைத்ததைவிட ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது கடினமாக உள்ளதாகவும், சவாலானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வாஷிங்டனின் மத்தியஸ்தத்தால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "முழுமையான மற்றும் உடனடி" போர்நிறுத்தத்தைப் பெற உதவியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில், அவர் தனது வரி அச்சுறுத்தல்களை உண்மையான சமாதானம் செய்பவர் என்று கூறி,யதுடன், அவ்வாறு கூறவில்லையென்றால் 8 உலகளாவிய மோதல்களை "தீர்க்க" முடியாது என்றும் கூறினார்.

ட்ரம்ப்பின் கூற்றை மறுத்துவரும் இந்தியா

ட்ரம்ப் இவ்வாறு கூறிவரும் நிலையில், இந்தியா பலமுறை அவரது கூற்றை நிராகரித்து, மறுப்பு தெரிவித்து வருகிறது. எந்த ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் இல்லாமல், நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தை மீண்டும் கூறிய ட்ரம்ப்

இதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிடும் என்ற தனது கூற்றையும் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 

ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து பேசிய அவர், "இந்தியா முற்றிலுமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. சீனா ரஷ்ய எண்ணெய் வாங்குவது பற்றி நான் ஷி ஜின்பிங்குடன் விவாதிக்கலாம்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.

மேலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியை அவர் முன்னர் மேற்கோள் காட்டினார். "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் இருக்காது என்று அவர்(மோடி) எனக்கு உறுதியளித்துள்ளார். அவரால் அதை உடனடியாகச் செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்" என்று அவர் கூறியிருந்தார்.

எண்ணெய் இறக்குமதி தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் இந்தியா மறுத்துள்ளது. நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா தெளிவாக கூறியுள்ளது.

யார் சொல்வது பொய்.?

இந்நிலையில், ட்ரம்ப் தற்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியது, ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்காது என மோடி உறுதியளித்திருப்பதாக கூறியது என இந்த இரண்டு விஷயங்களையும் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், இந்தியா அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த சூழலில், யார் சொல்வது பொய் என்று மக்கள் குழம்பிப் போய் உள்ளனர். இரு தரப்புமே மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக கூறி வருவது, பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
யார்றா நீங்கெல்லாம்.? நேபாள வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரிலிருந்து ரூ.57 லட்சம் கொள்ளை; 29 பேர் கைது
யார்றா நீங்கெல்லாம்.? நேபாள வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரிலிருந்து ரூ.57 லட்சம் கொள்ளை; 29 பேர் கைது
Xi Jinping China: நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்
நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget