மேலும் அறிய

Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

Thailand Bus Fire: தாய்லாந்தில் பள்ளி பேருந்து எரிந்து மாணவர்கள் உட்பட, 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Thailand Bus Fire: தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கல்வி சுற்றுலா சென்றபோது இந்த கோரவிபத்து நிகழ்ந்தது. 

ஓட்டுனர் போலீசில் சரண்:

தாய்லாந்தில் நேற்று பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மாணவர்கள் உட்பட 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற ஓட்டுனர் தாமாக முன்வந்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார். விபத்து நடந்தபோது அச்சம் காரணமாகவே, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார். 

ஓட்டுனர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கவனமின்றி பேருந்தை ஓட்டி மரணத்தையும் காயத்தையும் விளைவித்தததாகவும்,  பேருந்தை நிறுத்தி உதவி செய்யத் தவறியதாகவும், சம்பவம் குறித்துப் புகார் அளிக்காமல் இருந்ததாகவும் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுனர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த பேருந்து நிறுவனம் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?

நடந்தது என்ன?

தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிமாணவர்கள் நேற்று பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அதில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அடங்குவர். அதன்படி, பேருந்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 44 பேர் இருந்தனர். இந்நிலையில் கு கோட்நகரில் சென்று கொண்டிருந்த போது, உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து தீப்பற்றியது. பேருந்தில் தீ மளமளவென பரவி, மொத்தமாக எரிய தொடங்கியுள்ளது. இதை கண்டதும் ஓட்டுனர் பேருந்தில் இருந்து எகிறி குதித்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளார்.  தொடர்ந்து, பேருந்து மொத்தமாக எரிந்து நாசமானதில், 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மாணவர்கள் மழலை வகுப்பு தொடங்கி 4ம் வகுப்பை வரையிலான வயதை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 16 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.