மேலும் அறிய

kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்தவர்களில் தமிழர்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Kuwait Fire Accident: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ  விபத்தில் வடஇந்தியர் இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில்  சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த  கே.ஜி. ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? அந்த கட்டடத்தில் மலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட்ட குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், "ஆபத்தான நிலையில் உள்ள சிலர் உட்பட காயமடைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கட்டட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இன்று அதிகாலை 4:30 மணியளவில் சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் கீழே குதித்துள்ளனர். அதில் சிலர் மரணம் அடைந்திருக்கின்றனர். மற்றவர்கள், தீக்காயங்களாலும் புகையை சுவாசித்ததாலும் உயிரிழந்திருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரங்கல் தெரிவித்த இந்தியா: விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதில், 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் தூதர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் குவைத் தீ விபத்து சம்பவத்தின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

கட்டிடத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆனால், கட்டிடத்தில் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
12th Revaluation Result 2024: வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?Bird Flu | பரவியதா பறவை காய்ச்சல் கொத்து,கொத்தாக மடியும் காகங்கள் அதிர்ச்சி காட்சிகள்!SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
12th Revaluation Result 2024: வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
Online Delivery Cobra: மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
“படுத்திருந்தவர் மீது கார் ஏற்றினாரா எம்.பி-யின் மகள்?” கைது செய்த சென்னை காவல்துறை – பரபரப்பு சம்பவம்..!
“படுத்திருந்தவர் மீது கார் ஏற்றினாரா எம்.பி-யின் மகள்?” கைது செய்த சென்னை காவல்துறை – பரபரப்பு சம்பவம்..!
4 State Election 2024: மீண்டும் BJP Vs CONG - நெருங்கும் 4 சட்டமன்ற தேர்தல்கள், எங்கெங்கு தெரியுமா? களம் யாருக்கு ஆதரவு?
4 State Election 2024: மீண்டும் BJP Vs CONG - நெருங்கும் 4 சட்டமன்ற தேர்தல்கள், எங்கெங்கு தெரியுமா? களம் யாருக்கு ஆதரவு?
Embed widget