மேலும் அறிய

kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்தவர்களில் தமிழர்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Kuwait Fire Accident: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ  விபத்தில் வடஇந்தியர் இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில்  சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த  கே.ஜி. ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? அந்த கட்டடத்தில் மலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட்ட குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், "ஆபத்தான நிலையில் உள்ள சிலர் உட்பட காயமடைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கட்டட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இன்று அதிகாலை 4:30 மணியளவில் சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் கீழே குதித்துள்ளனர். அதில் சிலர் மரணம் அடைந்திருக்கின்றனர். மற்றவர்கள், தீக்காயங்களாலும் புகையை சுவாசித்ததாலும் உயிரிழந்திருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரங்கல் தெரிவித்த இந்தியா: விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதில், 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் தூதர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் குவைத் தீ விபத்து சம்பவத்தின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

கட்டிடத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆனால், கட்டிடத்தில் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
EPS on Vijay: “திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
“திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’  யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’ யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
EPS on Vijay: “திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
“திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’  யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’ யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Karuppu Movie Teaser: சூர்யாவுக்கு கை கொடுக்குமா ‘கருப்பு‘.? பிறந்த நாளில் அதிரிபுதிரியான டீசர் வெளியீடு
சூர்யாவுக்கு கை கொடுக்குமா ‘கருப்பு‘.? பிறந்த நாளில் அதிரிபுதிரியான டீசர் வெளியீடு
Tamilnadu Roundup: முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Embed widget