மேலும் அறிய

Syria Attack : சிரியாவில் அடுத்த சோகம்... ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கிச் சூடு: 53 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Syria Attack : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் சோகம்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ் பயங்கர வாதிகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அங்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. ஐ.எஸ் போன்று சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்பை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, இஸ்ரேலும், அமெரிக்காவும் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல்களும் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புகளும் பொதுமக்களை குறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகம்  தெரிவித்துள்ளது.

அரசு தரப்பில் கூறியதாவது, ”அல்-சோக்னா நகரின் தென்மேற்கு நகரில் சாலையில் இருந்த பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 53 பேர் உயிரிழந்ததகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் 46 பேர் பொது மக்கள், 7 பேர் ராணுவ வீரர்கள். பலியானவர்களின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இஸ்ரேல், சிரியா நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா நாட்டின் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் 15 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டமாஸ்கஸ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்களின்படி, ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-சிரியா படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-சிரியா இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு தான் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல உயிர்கள் பலியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Contact Lens : உஷார் மக்களே..கான்டாக்ட் லென்ஸ் உடன் தூங்கியதால் வந்த வினை.. பார்வைபோன பயங்கரம்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget