மேலும் அறிய

பீடி தொழிலாளி டூ அமெரிக்காவில் நீதிபதி: வறுமையில் வாடி உயர்ந்த இந்திய வம்சாவளியின் கதை..!

கேரளாவின் காசர்கோட்டில் தினசரி கூலித் தொழிலாளிகளுக்குப் பிறந்து அவர்களுக்கு உதவுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றியவர் பட்டேல்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்கறிஞராக உள்ள சுரேந்திரன் கே. படேல், சிறு வயதில் வறுமையில் வாடியவர். ஆனால், தொடர் உழைப்பின் காரணமாக தற்போது அமெரிக்காவில் நீதிபதியாக உயர்ந்துள்ளார்.

டெக்சாஸின் ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் அமைந்துள்ள 240வது மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக 51 வயதான அவர் ஜனவரி 1 ஆம் தேதி பதவியேற்றார்.

கேரளாவின் காசர்கோட்டில் தினசரி கூலித் தொழிலாளிகளுக்குப் பிறந்து அவர்களுக்கு உதவுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றியவர் பட்டேல். ஆனால், தற்போது இவர் நிகழ்த்திய சாதனை அனைவரையும் வியக்க வைக்கிறது.

பதின்ம வயதில், இவரும் இவரது சகோதரியும் பணம் சம்பாதிப்பதற்காக பீடி இலையை சுருட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தொழிலாளியாகவும் வேலை செய்துள்ளார்.

வறுமையின் காரணமாக, 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்து, முழு நேரமாக பீடி உருட்டும் பணியை தொடங்கினார்.

பின்னர், ஈ.கே. நாயனார் நினைவு அரசுக் கல்லூரியில் படேல் சேர்ந்தார். ஆனாலும், தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது. கல்லூரிக்கு போதுமான வருகை இல்லாததால் பேராசிரியர்கள் அவரை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

ஒரு காலத்தில் படிப்பை தொடர வேண்டாம் என எண்ணிய படேல், பிறகு ஒரு வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு தனது ஆசிரியர்களிடம் கெஞ்சினார்.

தனது வாழ்க்கை அனுபவம் குறித்து The Week செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட படேல், "நான் நல்ல மதிப்பெண்களை எடுக்கவில்லை என்றால் படிப்பை விட்டுவிடுகிறேன் என ஆசிரியரிடம் சொன்னேன். ஆனால், முடிவுகள் வந்ததும் நான் அதிக மதிப்பெண்களை எடுத்திருந்தேன். 

எனவே, அடுத்த ஆண்டு, அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். நான் கல்லூரியிலும் முதலிடம் பெற்றேன். கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிக்க விரும்பினேன். ஆனால், பொருளாதார நிலை ஒத்துழைக்கவில்லை. எனது முதல் ஆண்டில், எனது நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அதன் பிறகு, ஒரு ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் சேர்ந்தேன்.

1995 இல் சட்டப் பட்டம் பெற்றேன். 1996 ஆம் ஆண்டு கேரளாவின் ஹோஸ்துர்க்கில் வழக்கறிஞராக பணி செய்யத் தொடங்கினேன். படிப்படியாக பிரபல வழக்கறிஞரானேன்.

ஏறக்குறைய, 10 ஆண்டுகளுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்ய தொடங்கினேன். 2007 ஆம் ஆண்டு எனது குடும்பத்திற்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, வாழ்க்கையே மாறிவிட்டது" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget