மேலும் அறிய

ராஜபக்சக்கள் திருடிய பணத்தை மீட்டால் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது: இலங்கை முன்னாள் அதிபர்

இலங்கையில் ராஜபக்சக்கள் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் அதிகாரமிக்க நபர்களாக வலம் வருபவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். மகிந்த ராஜபக்ச தொடங்கி கோத்தபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நம்மா ராஜபக்ச, யோஷிதா ராஜபக்ச, சஷிந்திரா ராஜபக்ச வரையில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாரமிக்க பதவிகளில் இருந்தவர்கள்.

இலங்கை அரசியலை ஆட்டிப்படைக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்:

இவர்களின் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இவர்கள் இருக்கின்றனர். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில், இலங்கை அதிபராகவும் 2002 முதல் 2004 மற்றும் 2018 முதல் 2019 வரையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
 
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, அதிபராக பதவி வகித்தபோதும், 2019 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தபோதும் நிதித்துறையையும் மகிந்த ராஜபக்சவே கவனித்து வந்தார். இவர் அதிபராக பதவி  வகித்த காலத்தில்தான், விடுதலை புலிகளுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. தனது முதல் பதவிக்காலத்தில் நடந்த உள்நாட்டு போரில் விடுதலை புலிகலை தோற்கடித்தார். 

இதை தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியை பதிவு செய்தார். ஊழல் செய்ததாகவும் போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் மகிந்த ராஜபக்ச மீது கடும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் ஆட்சியை பறி கொடுத்தார். 

இருப்பினும், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபராக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்ச. மகிந்த, கோத்தபய பதவிக்காலத்தில் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நம்மா ராஜபக்ச, யோஷிதா ராஜபக்ச, சஷிந்திரா ராஜபக்ச உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

"திருடிய பணத்தை மீட்டால் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது" 

பழைமைவாத, பெளத்த பேரினவாதத்தை வைத்து அரசியல் செய்து வந்த ராஜபக்சவுக்கு பேரிடியாக அமைந்தது இலங்கை பொருளாதார நெருக்கடி. இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மக்கள், ராஜபக்ச அரசுக்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்ச குடும்பத்தினர் துடைத்து எறியப்பட்டனர். 

இந்த நிலையில், இலங்கையில் ராஜபக்சக்கள் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது. ராஜபக்சக்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
SpaceX Starship Explodes: நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Embed widget