மேலும் அறிய

Sri Lankan Tamils: நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிங்கப்பூர் கடற்படை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை சிங்கப்பூர் கடற்படை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகதிகளாக வெளியேற்றம்:

இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கனடா நாட்டுக்கு அகதிகளாக சென்ற, இலங்கை தமிழரின் கப்பலானது, வியாட்நாம் மற்றும் பிலிப்பைன் இடையேயான கடற்பகுதிக்குள் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. 

பின்னர் நடுக்கடலில் தத்தளித்த, குழந்தைகள் உட்பட 306 பேரை சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து, இலங்கை கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களுக்காக, இலங்கையிலிருந்து மக்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

நடுக்கடலில் தத்தளித்த 306 பேர்:

இந்நிலையில், 306 பேர் கொண்ட கப்பலானது, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும், அவர்கள் சென்று கொண்டிருந்த கப்பலானது பழுதாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்தது.


Sri Lankan Tamils: நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை

இந்நிலையில், இந்த விவகாரம் அறிந்த கொண்டதையடுத்து, இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களை பாதுகாக்கும் வகையில், அண்டை நாடுகளுடன் தொடர்பு கொண்டோம்.

பின்னர் சிங்கப்பூர் கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பூர் கடற்படை இலங்கை மக்களை மீட்டு, அருகிலுள்ள நாடான வியட்நாம் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தொடர் கதை:

இலங்கையில் போர் நிகழ்ந்த காலங்களில், மக்கள் பலர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினர். இலங்கை மக்கள், இந்தியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதையடுத்து, இலங்கை மக்கள், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்று பதவி விலகினார். 

இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டார். இந்நிலையில்,விலைவாசி சற்று குறைக்கப்பட்டாலும், இன்னும் அதிக அளவிலே நீடித்து வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், இலங்கை மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
"சோலியை முடிச்ச சோலி கே பாட்டு" மேடையிலே நின்ற கல்யாணம் - மனம் உடைந்த மாப்பிள்ளை!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
Embed widget