மேலும் அறிய

சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து...பிரிட்டன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

யுனைடெட் கிங்டம் நாடாளுமன்றத்திலிருந்து அனுமதி பெறாமல் சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யுனைடெட் கிங்டம் என்பது வடமேற்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்த இறையாண்மை கொண்ட பகுதியாகும். அதில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஒப்பந்தத்தின் அடிப்படையில்  யுனைடெட் கிங்டம் உருவானது. அதிலும், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது பிரிட்டன் என அழைக்கப்படுகிறது.

இருப்பினும், கடந்த 1920களில் இருந்து பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற ஸ்காட்லாந்து முயற்சித்து வருகிறது. ஸ்காட்லாந்து சுதந்திர இயக்கத்தின் அரசியல் வடிவமாக தற்போது ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி உருவெடுத்துள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த அப்போதைய கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையிலான அரசாங்கம் அனுமதி அளித்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டன் ஒன்றியத்தில் தொடரவே 55 சதவிகித மக்கள் வாக்களித்தனர். 

இச்சூழலில், 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 19ஆம் தேதி, இரண்டாம் பொது வாக்கெடுப்பை நடத்த ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சரும் ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான நிக்கோலா ஸ்டர்ஜன் திட்டமிட்டார். இது தொடர்பான வழக்கில், யுனைடெட் கிங்டம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்காட்டிஷ் தேசியவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் அந்த தீர்ப்பில், யுனைடெட் கிங்டம் நாடாளுமன்றத்திலிருந்து அனுமதி பெறாமல் சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறியுள்ள நிக்கோலா ஸ்டர்ஜன், "யுனைடெட் கிங்டமின் அடுத்த பொது தேர்தலின் முக்கிய விவகாரமாக ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சிக்கு ஸ்காட்லாந்தின் சுதந்திரமே இருக்கும்" என்றார். 

நிக்கோலாவின் வேண்டுகோளின் பேரில்தான், ஸ்காட்லாந்தின் உயர்மட்ட சட்ட நிபுணர், வழக்கறிஞர் டோரதி பெயின், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அத்தகைய வாக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளதா? எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட் ரீட், "அதிகார பகிர்வின் ஒரு அங்கமாக கடந்த 1999ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி தனி ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அதன்படி, பொதுவாக்கெடுப்பை கோரும் அதிகாரம் யுனைடெட் கிங்டமிடமே உள்ளது.

நீதிமன்றம் அதன் தீர்ப்பில் ஒருமனதாக இருந்ததாலும் குறிப்பிட்ட விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாலும் எதிர்பார்த்ததை விட விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டது" என்றார்.

தீர்ப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ள நிக்கோலா ஸ்டர்ஜன், "நாளுக்கு நாள் தெளிவாகிறது. சுதந்திரத்தை அடைவது தற்போது விரும்பத்தக்கது மட்டும் அல்ல.

 

பிரெக்சிட் பேரழிவு, நாம் வாக்களிக்காத அரசாங்கங்களால் திணிக்கப்படும் கொள்கைகளினால் ஏற்படும் சேதம் மற்றும் குறைந்த வளர்ச்சியில் இருந்து தப்பிக்க வேண்டியது அவசியம். சமத்துவமின்மை பொருளாதார மாதிரி நம்மைத் தடுத்து நிறுத்துகிறது" என்றார்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hormuz strait:
Hormuz strait: "வெறும் 33 கி.மீ தான்... ஆனால் உலகையே மிரட்டும் ஹார்முஸ்.. ஏன் அகலப்படுத்தவில்லை?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Affordable Long Range EVs: பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Embed widget