மேலும் அறிய

"பிளவை ஏற்படுத்த முயற்சி.. ஆனால், பிரதமர் மோடி விவேகமுள்ள தலைவர்" ரஷிய அதிபர் புதின் புகழாரம்

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது.

இந்திய, ரஷிய நாடுகளுக்கிடையே பல காலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவுடனான உறவு அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டபோதிலும், ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறோம்.

நட்பு பாராட்டி வரும் இந்திய, ரஷிய நாடுகள்:

குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு இரு நாட்டு உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. உக்ரைனுக்கு எதிராக படையெடுத்த ரஷியாவை கண்டிக்கும் விதமாக ஐநா அரங்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் ரஷியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது.

அதேபோல, ரஷியாவுக்கு எதிராக மேற்குவலக நாடுகள் பல விதமான பொருளாதார தடை விதித்தபோதிலும், ரஷியாவுடன் இந்தியா தொடர் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பலன் அளிக்கவில்லை.

ரஷியாவுடன் சுமூகமான உறவை பேணி வரும் இந்தியா தலைமை பற்றி ரஷிய அதிபர் புதின் பல முறை பாராட்டி பேசியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தற்போது புதின் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சி"

ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புதின், "இந்திய அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களுக்காக சுதந்திரமாகச் செயல்படுகிறது. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் அர்த்தமற்றது.

மேற்குலகம் தங்களின் ஏகபோகத்திற்கு உடன்படாத ஒவ்வொருவருக்கும் எதிரியை உருவாக்க முயல்கிறது. அனைவரும் இப்படிப்பட்ட ஆபத்தில் உள்ளனர். இந்தியாவும் கூட. ஆனால் இந்தியத் தலைமை தனது தேசத்தின் நலன்களுக்காக சுதந்திரமாக செயல்படுகிறது. ரஷியாவிலிருந்து இந்தியாவை பிரிக்கும் முயற்சிகள் அர்த்தமற்றவை. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என்றார்.

இந்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள புதின், "அவரது தலைமையில் இந்தியா மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அது ஒரு சக்திவாய்ந்த நாடு. வலிமைமிக்க நாடு. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அது வலுவாக வளர்ந்து வருகிறது. ரஷியாவைப் போலவே இந்தியாவிற்கும் எல்லைகள் இல்லை. ஏனெனில், இந்தியர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் தங்கள் அடையாளத்தை உருவாக்குகிறார்கள்" என்றார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்காததற்கு காரணம் கூறிய புதின், "ஒரு நிகழ்வின் போது நம் நண்பர்களுக்கு நான் ஏன் சில பிரச்சனைகளை உருவாக்க வேண்டும்?" என விளக்கம் அளித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget