மேலும் அறிய

"பிளவை ஏற்படுத்த முயற்சி.. ஆனால், பிரதமர் மோடி விவேகமுள்ள தலைவர்" ரஷிய அதிபர் புதின் புகழாரம்

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது.

இந்திய, ரஷிய நாடுகளுக்கிடையே பல காலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவுடனான உறவு அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டபோதிலும், ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறோம்.

நட்பு பாராட்டி வரும் இந்திய, ரஷிய நாடுகள்:

குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு இரு நாட்டு உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. உக்ரைனுக்கு எதிராக படையெடுத்த ரஷியாவை கண்டிக்கும் விதமாக ஐநா அரங்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் ரஷியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது.

அதேபோல, ரஷியாவுக்கு எதிராக மேற்குவலக நாடுகள் பல விதமான பொருளாதார தடை விதித்தபோதிலும், ரஷியாவுடன் இந்தியா தொடர் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பலன் அளிக்கவில்லை.

ரஷியாவுடன் சுமூகமான உறவை பேணி வரும் இந்தியா தலைமை பற்றி ரஷிய அதிபர் புதின் பல முறை பாராட்டி பேசியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தற்போது புதின் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சி"

ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புதின், "இந்திய அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களுக்காக சுதந்திரமாகச் செயல்படுகிறது. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் அர்த்தமற்றது.

மேற்குலகம் தங்களின் ஏகபோகத்திற்கு உடன்படாத ஒவ்வொருவருக்கும் எதிரியை உருவாக்க முயல்கிறது. அனைவரும் இப்படிப்பட்ட ஆபத்தில் உள்ளனர். இந்தியாவும் கூட. ஆனால் இந்தியத் தலைமை தனது தேசத்தின் நலன்களுக்காக சுதந்திரமாக செயல்படுகிறது. ரஷியாவிலிருந்து இந்தியாவை பிரிக்கும் முயற்சிகள் அர்த்தமற்றவை. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என்றார்.

இந்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள புதின், "அவரது தலைமையில் இந்தியா மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அது ஒரு சக்திவாய்ந்த நாடு. வலிமைமிக்க நாடு. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அது வலுவாக வளர்ந்து வருகிறது. ரஷியாவைப் போலவே இந்தியாவிற்கும் எல்லைகள் இல்லை. ஏனெனில், இந்தியர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் தங்கள் அடையாளத்தை உருவாக்குகிறார்கள்" என்றார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்காததற்கு காரணம் கூறிய புதின், "ஒரு நிகழ்வின் போது நம் நண்பர்களுக்கு நான் ஏன் சில பிரச்சனைகளை உருவாக்க வேண்டும்?" என விளக்கம் அளித்தார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
PM Modi Foreign Visit: 5 நாடுகளுக்கே ரூ.67 கோடி, அப்ப மொத்தமா? 4 ஆண்டுகளில் மோடி பறந்ததற்கான செலவு விவரம்
PM Modi Foreign Visit: 5 நாடுகளுக்கே ரூ.67 கோடி, அப்ப மொத்தமா? 4 ஆண்டுகளில் மோடி பறந்ததற்கான செலவு விவரம்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
12th Supplementary Exam Result: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல், மறுகூட்டல் எப்போது?
12th Supplementary Exam Result: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல், மறுகூட்டல் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
PM Modi Foreign Visit: 5 நாடுகளுக்கே ரூ.67 கோடி, அப்ப மொத்தமா? 4 ஆண்டுகளில் மோடி பறந்ததற்கான செலவு விவரம்
PM Modi Foreign Visit: 5 நாடுகளுக்கே ரூ.67 கோடி, அப்ப மொத்தமா? 4 ஆண்டுகளில் மோடி பறந்ததற்கான செலவு விவரம்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
12th Supplementary Exam Result: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல், மறுகூட்டல் எப்போது?
12th Supplementary Exam Result: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல், மறுகூட்டல் எப்போது?
நா ரொம்ப லொட லொட.. விஜயகாந்த் பயங்கரமா கோபப்படுவாரு.. மனம் திறந்த நடிகை தாரணி
நா ரொம்ப லொட லொட.. விஜயகாந்த் பயங்கரமா கோபப்படுவாரு.. மனம் திறந்த நடிகை தாரணி
அரசு வேலை கனவா?  TNPSC Group 2 இலவச பயிற்சி வகுப்புகள்! வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
அரசு வேலை கனவா? TNPSC Group 2 இலவச பயிற்சி வகுப்புகள்! வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
US-Israel Condemn France: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரான்ஸ்; மேக்ரானை வறுத்தெடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரான்ஸ்; மேக்ரானை வறுத்தெடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Embed widget