![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Russia-Ukraine Crisis: ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு.. எத்தனை பேர் தெரியுமா?
கடந்த 2 நாட்களை தொடர்ந்து 3 வது நாளான இன்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Russia-Ukraine Crisis: ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு.. எத்தனை பேர் தெரியுமா? Russia-Ukraine Crisis: Russian attack kills 198 Ukrainians Russia-Ukraine Crisis: ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு.. எத்தனை பேர் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/8892b8f33f36d72e2e409fad6310f121_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் 198 உக்ரைனியர்கள் உயிரிழந்திற்பதாக உக்ரை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களை தொடர்ந்து 3 வது நாளான இன்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும், அந்த பகுதிகள் முழுவதும் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதலில் பொது மக்கள் உயிரிழந்திருப்பதை உக்ரைன் நாட்டு சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது நாளன இன்று, இதுவரை 198 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
We are controlling Kyiv and key points around the city. Who wants to come and help us do, we will arm you. We need to stop this war, we can live in peace, says Ukraine President Vladimir Zelensky: Reuters pic.twitter.com/y6BrZVtlMG
— ANI (@ANI) February 26, 2022
இந்நிலையில், ”ரஷ்ய ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான செய்தி வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை. உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக போராடுகிறோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டார். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு உக்ரைன் ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சு வார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என அவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்க வெளியிட்ட தீர்மானத்தை ரஷ்யா தகர்த்துள்ளது அனைத்து நாடுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)