மேலும் அறிய

Pak Vs Afg: ரசிகர்கள் ஷாக்.. பாக்., தாக்குதலில் கொல்லப்பட்ட 3 ஆஃப்., கிரிக்கெட் வீரர்கள் - ரஷித் கான் வேதனை

Pak Vs Afg: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆஃப்கானிஸ்தானின் மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pak Vs Afg: பாகிஸ்தான் தாக்குதலில் ஆஃப்கானிஸ்தானின் மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஃப்., கிரிக்கெட் வீரர்கள் மரணம்:

பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் தொடங்கவிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை உடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி, ”வீரர்கள் நட்பு ரீதியான போட்டியில் பங்கேற்பதற்காக உர்கன் பகுதியிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள ஷரானாவுக்கு பயணம் செய்திருந்தனர். அங்கிருந்து உர்குனுக்கு வீடு திரும்புவதற்காக வீரர்கள் ஓரிடத்தில் கூடியிருந்த நிலையில் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷித் கான் வேதனை

மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட இளம் கிரிக்கெட் வீரர்களும் பலியானது பெரும் சோகம். பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும், மேலும் அவை கவனிக்கப்படாமல் போகக்கூடாது. இழந்த விலைமதிப்பற்ற அப்பாவி ஆன்மாக்களின் வெளிச்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ACBயின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன், நமது தேசிய கண்ணியம் மற்ற அனைத்தையும் விட முன்னதாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்:

பல நாட்களாக நீடித்த தீவிர எல்லை தாண்டிய மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இந்த கொடிய தாக்குதல்கள் நடந்துள்ளன. தோஹா பேச்சுவார்த்தைகள் முடியும் வரை ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற இருந்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 இடங்களில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
6 ஆண்டுகள் AI துறையில் வேலை… ரூ.670 கோடி மாளிகை வாங்கிய இளைஞர்! இவரின் கதை வேற லெவல்!
6 ஆண்டுகள் AI துறையில் வேலை… ரூ.670 கோடி மாளிகை வாங்கிய இளைஞர்! இவரின் கதை வேற லெவல்!
மேகங்களை பார்த்தாலே மாதம் ரூ.8.5 லட்சம்! 23 வயது இளைஞருக்கு கிடைத்த ‘ட்ரீம் ஜாப்’.. வேலை என்ன தெரியுமா?
மேகங்களை பார்த்தாலே மாதம் ரூ.8.5 லட்சம்! 23 வயது இளைஞருக்கு கிடைத்த ‘ட்ரீம் ஜாப்’.. வேலை என்ன தெரியுமா?
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget