மேலும் அறிய

Pak Vs Afg: ரசிகர்கள் ஷாக்.. பாக்., தாக்குதலில் கொல்லப்பட்ட 3 ஆஃப்., கிரிக்கெட் வீரர்கள் - ரஷித் கான் வேதனை

Pak Vs Afg: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆஃப்கானிஸ்தானின் மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pak Vs Afg: பாகிஸ்தான் தாக்குதலில் ஆஃப்கானிஸ்தானின் மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஃப்., கிரிக்கெட் வீரர்கள் மரணம்:

பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் தொடங்கவிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை உடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி, ”வீரர்கள் நட்பு ரீதியான போட்டியில் பங்கேற்பதற்காக உர்கன் பகுதியிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள ஷரானாவுக்கு பயணம் செய்திருந்தனர். அங்கிருந்து உர்குனுக்கு வீடு திரும்புவதற்காக வீரர்கள் ஓரிடத்தில் கூடியிருந்த நிலையில் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷித் கான் வேதனை

மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட இளம் கிரிக்கெட் வீரர்களும் பலியானது பெரும் சோகம். பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும், மேலும் அவை கவனிக்கப்படாமல் போகக்கூடாது. இழந்த விலைமதிப்பற்ற அப்பாவி ஆன்மாக்களின் வெளிச்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ACBயின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன், நமது தேசிய கண்ணியம் மற்ற அனைத்தையும் விட முன்னதாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்:

பல நாட்களாக நீடித்த தீவிர எல்லை தாண்டிய மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இந்த கொடிய தாக்குதல்கள் நடந்துள்ளன. தோஹா பேச்சுவார்த்தைகள் முடியும் வரை ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற இருந்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 இடங்களில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget