மேலும் அறிய

North Korea Missile Japan: முதல் ஏவுகணையை ஏவிய வடகொரியா: என்ன செய்யப்போகுது ஜப்பான்? காத்திருக்கும் உலகநாடுகள்!

ஜப்பான் மீது வடகொரியா முதல் ஏவுகணையை ஏவியுள்ளதால் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகையே தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள சம்பவமாக இருப்பது, வடகொரியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான போர் பாதற்ற சூழல் தான்.  ஏற்கனவே பலமுறை உலக நாடுகள் உட்பட ஐ.நா சபை என பல தரப்பில் இருந்தும் எச்சரித்தும் அதனை கொஞ்சமும் கண்டு கொள்ளாத வடகொரியா கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. அதில் மிகவும் குறிப்பாக இந்த முறை அவ்வாறு நடந்த ஏவுகணை சோதனையானது, ஜப்பான் கடல் எல்லையில், பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இதனால் போர் பதற்ற சூழல் மிகவும் அதிகரித்துள்ளது.  இதற்கு முன்னர் பல ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியிருந்தாலும், அவை எல்லாம் ஜப்பான் கடல் எல்லையில் விழாது. இம்முறை ஜப்பான் கடல் எல்லையில் ஏவுகணை விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  அதே நேரத்தில் வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை என்பது ஜப்பானை கடந்து தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (04/10/2022) , வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட, ஒலியின் வேகத்தினை விட 17 மடங்கு வேகமாக பறந்து வந்த ஏவுகணை சுமார் 4,600 கிலோமீட்டர்கள் கடந்து வந்து, பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஜப்பான் தரப்பில், ஏவப்பட்ட ஏவுகணை Hwasong-12 ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், பாலிஸ்டிக் ஏவுகணையாகக் கூட  (IRBM) இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The North Korean Review (NKR) (@north_korean_review)

வட கொரியா வழக்கமாக கொரிய தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் ஏவுகணைகளை பரிசோதனை செய்யும். ஜப்பனை ஆத்திரமூட்டும் வகையில் தான் இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோவின் கூற்றுப்படி ஏவுகணை ஜப்பானின் தோஹோகு பகுதியில் பறந்தது. மேலும், அண்டை நாட்டின் மீது ஏவுகணையை வீசுவது என்பது ஆத்திரமூட்டும் செயல் ஆகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் மீது வடகொரியா ஏவியுள்ள முதல் ஏவுகணை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கோடையில் வானிலை மோசமாக இருக்கும்போது வட கொரியா அடிக்கடி சோதனையில் இடைவேளை எடுக்கும். மேலும் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் ஆரம்பம் வந்தவுடன் மீண்டும்,  சோதனைக்கு சரியான சூழ்நிலையாக இருக்கலாம். அதனால் இவ்வாறு வடகொரியா சோதனை நடத்துகையில் ஜப்பானின் எல்லைப் பகுதியில் விழுந்திருக்க கூடும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். 

ஜப்பானின் கடல் எல்லையில் விழுந்துள்ள இந்த ஏவுகணையால் ஜப்பான் மற்றும் வடகொரியாவுக்கு இடையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் வடகொரியாவை எச்சரித்து வந்தாலும் வடகொரியா, மற்றுமொரு அணு ஆயுத சோதனை நடத்த தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடந்து வரும் நிலையில், தற்போது வடகொரியா மற்றும் ஜப்பான் இடையிலான இந்த போர் பதற்ற சூழல் மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கமாக அமைந்து விடுமோ எனவும் பலர் பயப்பட்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Hormuz strait:
Hormuz strait: "வெறும் 33 கி.மீ தான்... ஆனால் உலகையே மிரட்டும் ஹார்முஸ்.. ஏன் அகலப்படுத்தவில்லை?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget