மேலும் அறிய

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்: கொரியா நாடுகள் பிரிய காரணம் என்ன?

ஒன்றாக இருந்த கொரியா, ஏன் இரண்டாக பிரிந்தது? இதில், அமெரிக்க, ரஷியாவின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை காண முயற்சிக்கிறது.

உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்வாக பனிப்போர் பார்க்கப்படுகிறது. வரலாற்றை புரட்டிப்போட்ட அந்த நிகழ்வின் தாக்கம் இன்றளவும் உலக நாடுகளில் தென்படுகிறது. ஒன்றாக இருந்த கொரியா, ஏன் இரண்டாக பிரிந்தது? இதில், அமெரிக்க, ரஷியாவின் பங்கு என்ன? தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்த வைக்க முடியாதது ஏன்? என பல கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை காண முயற்சிக்கிறது.

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்:

உலகில் நடந்து வரும் மோதல்கள் மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் ஆகியவை ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் கொரிய தீபகற்பத்தில் போர் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.

உலக வல்லரசுகளான சோவியத் யூனியன் (தற்போது ரஷியா) மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடந்த பனிப்போருக்கு கொரிய தீபகற்பம் இரையானது. அதன் விளைவாகத்தான், கடந்த 70 ஆண்டுகளாக வடகொரிய, தென்கொரிய நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. இவை இரண்டும் பிரிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கொரிய தீபகற்பம் ஒருங்கிணைந்த கொரியாவாகவே இருந்தது. அதை, பல ராஜ்ஜியங்கள் ஆட்சி செய்து வந்தன. கடந்த 1905ஆம் ஆண்டு, ரஷிய, ஜப்பான் நாடுகளுக்கிடையே நடந்த போரை தொடர்ந்து, ஜப்பானின் ஆளுகை கீழ் வந்தது கொரிய தீபகற்பம். இரண்டாம் உலக போர் முடியும் வரை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக கொரியாவில் ஜப்பானின் காலணி ஆட்சி நடந்து வந்தது. இந்த காலக்கட்டத்தில்தான், கொரிய இரண்டாக பிரிவதற்கான விதை விதைக்கப்பட்டது.

கொரியா இரண்டாக பிரிய காரணம் என்ன?

கடந்த 1945ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கொரிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை நேச நாடுகள் பிரித்து கொண்டன. அடுத்த மூன்று ஆண்டுகளில் (1945-48), சோவியத் ராணுவமும் அதன் கூட்டு சக்திகளும் தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் கம்யூனிச ஆட்சியை அமைத்தனர்.
தெற்கே, ராணுவ அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, அதற்கு நேரடி ஆதரவை வழங்கியது.

சோவியத் கொள்கைகள், வடக்கின் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் விவசாய மக்களிடையே பிரபலமாக இருந்தபோதும், பெரும்பாலான நடுத்தர வர்க்க கொரியர்கள், தெற்கே தப்பி ஓடிவிட்டனர். அங்குதான், கொரிய மக்களில் பெரும்பாலானோர் இன்று வரை வசித்து வருகின்றனர். இதற்கிடையில், தெற்கில் அமைந்த அமெரிக்க ஆதரவு ஆட்சி, கம்யூனிச எதிர்ப்பை ஊக்குவித்து, வலதுசாரிகளை ஆதரித்தது.

கடந்த 1948 ஆம் ஆண்டு, தீபகற்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இதில் பங்கேற்க, வடக்கு பகுதி மறுத்தது. இதை தொடர்ந்து, தெற்கு சியோலில் தனது சொந்த அரசாங்கத்தை உருவாக்கியது. இது வலுவான கம்யூனிச எதிர்ப்புடன் சிங்மேன் ரீ தலைமையில் உருவானது.

பியாங்யாங்கை தலைநகராக கொண்டு வடக்கு பகுதி வடகொரியாவாக உருவாக்கப்பட்டது. கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு என அதற்கு பெயர் வைக்கப்பட்டது. முன்னாள் கம்யூனிஸ்ட் கெரில்லா போராளியான கிம் இல் சுங், அதன் முதல் அதிபராக பதவியேற்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget