மேலும் அறிய

Everest Climbers Fee: ஓ.. அப்ப இது ஃபிரீ இல்லையா? எவரெஸ்ட்டில் ஏறுவதற்கான கட்டணம் இத்தனை லட்சங்களா? நேபாள அரசு அதிரடி

உலகின் உயரமான மலையான எவரெஸ்டில் ஏறுவதற்கான கட்டணத்தை உயர்த்த, நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் உயரமான மலையான எவரெஸ்டில் ஏறும் வெளிநாட்டவருக்கான கட்டணத்தை உயர்த்த, நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எவரெஸ்ட் சிகரம்:

உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ளது. இமய மலைத்தொடரின் ஒரு அங்கமாக உள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 29,000 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், மலையேற்றத்தில் ஆர்வமுள்ள ஏராளமானோர், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நேபாள நாட்டில் குவிகின்றனர்.  அந்நாட்டின் சுற்றுலாதுறை மூலம் வரும் முக்கிய வருவாயில் எவரெஸ்ட் சிகரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கட்டணம் உயர்வு:

மலையேற்றத்தில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு ஒருவருக்கு, தற்போது தலா 9 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கடந்த 2015 ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டணத்தை வரும் 2025ம் ஆண்டு முதல், 12.30 லட்சம் ரூபாயாக உயர்த்த நேபாள சுற்றுலாத் துறை அந்நாட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதற்கு நேபாள அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், வரும் 2025ம் ஆண்டு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. அதே நேரம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் நேபாள நாட்டை சேர்ந்ததோருக்கான கட்டணம், 75,000 ரூபாயாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது முதல்?

2015ம் ஆண்டிற்கு முன்பு வரை 15 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றால், ஒவ்வொரு நபருக்கும் தலா 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்த நடைமுறை 2015ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு, வெளிநாட்டவர் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. 

உடல்களை மீட்க தீவிரம்:

இதனிடையே,மலையேற்றத்தில் ஈடுபடுவோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் போது, அவர்களின் உடல்களை மீட்க, 16 லட்சம் ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருப்பதாலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும் மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் உடல்களை மீட்காமல் தவிர்ப்பது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த விபத்தில் உயிரிழப்போரின் உடல்களை மீட்பதை கட்டாயமாக்கும் புதிய ஒழுங்குமுறையை வகுக்கவும் நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

தொடரும் சோகம்:

நடப்பாண்டு வசந்த காலத்தில் மட்டும் எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பனிச்சரிவின் போது, நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் 14 பேர் உயிரிழந்தனர். 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிகழ்ந்த பனிச்சரிவால் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்பில் இருந்த 20 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்பது சிக்கலானதாகவும், அதிக செலவை கொண்டதாகவும் உள்ளது. இதனால், பலரின் உடல்கள் மிட்கப்படாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான், உயிரிழப்போரின் உடல்களை மீட்பதை கட்டாயமாக்கும் புதிய ஒழுங்குமுறையை வகுக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget