மேலும் அறிய

Everest Climbers Fee: ஓ.. அப்ப இது ஃபிரீ இல்லையா? எவரெஸ்ட்டில் ஏறுவதற்கான கட்டணம் இத்தனை லட்சங்களா? நேபாள அரசு அதிரடி

உலகின் உயரமான மலையான எவரெஸ்டில் ஏறுவதற்கான கட்டணத்தை உயர்த்த, நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் உயரமான மலையான எவரெஸ்டில் ஏறும் வெளிநாட்டவருக்கான கட்டணத்தை உயர்த்த, நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எவரெஸ்ட் சிகரம்:

உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ளது. இமய மலைத்தொடரின் ஒரு அங்கமாக உள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 29,000 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், மலையேற்றத்தில் ஆர்வமுள்ள ஏராளமானோர், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நேபாள நாட்டில் குவிகின்றனர்.  அந்நாட்டின் சுற்றுலாதுறை மூலம் வரும் முக்கிய வருவாயில் எவரெஸ்ட் சிகரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கட்டணம் உயர்வு:

மலையேற்றத்தில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு ஒருவருக்கு, தற்போது தலா 9 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கடந்த 2015 ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டணத்தை வரும் 2025ம் ஆண்டு முதல், 12.30 லட்சம் ரூபாயாக உயர்த்த நேபாள சுற்றுலாத் துறை அந்நாட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதற்கு நேபாள அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், வரும் 2025ம் ஆண்டு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. அதே நேரம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் நேபாள நாட்டை சேர்ந்ததோருக்கான கட்டணம், 75,000 ரூபாயாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது முதல்?

2015ம் ஆண்டிற்கு முன்பு வரை 15 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றால், ஒவ்வொரு நபருக்கும் தலா 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்த நடைமுறை 2015ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு, வெளிநாட்டவர் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. 

உடல்களை மீட்க தீவிரம்:

இதனிடையே,மலையேற்றத்தில் ஈடுபடுவோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் போது, அவர்களின் உடல்களை மீட்க, 16 லட்சம் ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருப்பதாலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும் மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் உடல்களை மீட்காமல் தவிர்ப்பது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த விபத்தில் உயிரிழப்போரின் உடல்களை மீட்பதை கட்டாயமாக்கும் புதிய ஒழுங்குமுறையை வகுக்கவும் நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

தொடரும் சோகம்:

நடப்பாண்டு வசந்த காலத்தில் மட்டும் எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பனிச்சரிவின் போது, நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் 14 பேர் உயிரிழந்தனர். 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிகழ்ந்த பனிச்சரிவால் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்பில் இருந்த 20 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்பது சிக்கலானதாகவும், அதிக செலவை கொண்டதாகவும் உள்ளது. இதனால், பலரின் உடல்கள் மிட்கப்படாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான், உயிரிழப்போரின் உடல்களை மீட்பதை கட்டாயமாக்கும் புதிய ஒழுங்குமுறையை வகுக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
அன்பில் மகேஷ் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை - எச்.ராஜா
அன்பில் மகேஷ் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை - எச்.ராஜா
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Embed widget