மேலும் அறிய

மாவீரன் நெப்போலியன் நகைகள் கொள்ளை.. பாரீஸ் அருங்காட்சியகத்தில் பலே திருட்டு - அதிர்ச்சியில் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் மாவீரன் நெப்போலியனின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான அருங்காட்சியகம் லோவ்ரே அருங்காட்சியகம். ப்ரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. உலகின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் இந்த அருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது. 

நெப்போலியன் நகைகள் கொள்ளை:

இந்த சூழலில், இந்த அருங்காட்சியகத்தில் இன்று கொள்ளை நடந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாரிஸ் மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த கொள்ளையில் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் மன்னர் நெப்போலியனுக்குச் சொந்தமான நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டின் சில பழமையான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளை நடந்தது எப்படி?

இந்த கொள்ளை சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் அரங்கேறியுள்ளது. கொள்ளையர்கள் இந்த அருங்காட்சியகம் கீழே நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் வழியாக ஹைட்ராலிக் ஏணி மூலமாக அருங்காட்சியகம் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கே அருங்காட்சியகத்தில் உள்ள அப்போலோ கேலரியின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்குதான் நெப்போலியனுக்குச் சொந்தமான மற்றும் நெப்போலியன் காலத்து நகைகள் இருந்தது. 

பின்னர், சில கருவிகள் மூலமாக கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடி சாதுர்யமாக தப்பியுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதில் நெப்போலியன் மன்னருக்குச் சொந்தமான ஒன்பது பாகங்கள் நகைகளும் அடங்கும். இந்த ஆபரணம் விலை மதிப்பில்லாதது ஆகும். 

இந்த கொள்ளை சம்பவத்தால் அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை காண வந்த மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களிடம் உள்ள பொருட்களை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மோனாலிசா ஓவியம்:

இந்த புகழ்பெற்ற அருங்காட்சியகத்திற்கு தினசரி 30 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இ்ந்த அருங்காட்சியகத்தில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், சிற்பங்கள் என எண்ணற்ற பொக்கிஷங்கள் இங்கு உள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு சிறப்பே மோனாலிசாவின் ஓவியமே ஆகும்.

இந்த அருங்காட்சியகத்தில் பல முறை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மோனாலிசாவின் ஓவியத்தையும் கொள்ளையடித்துள்ளனர். 1911ம் ஆண்டு மோனாலிசா ஓவியத்தை முன்னாள் ஊழியர் தனது ஆடையில் மறைத்து எடுத்துக்கொண்டு திருடிச்சென்றார். பின்னர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியில் அது மீட்கப்பட்டது. 

திருடப்பட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுவிட்டது. 1983ம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளையே மிகவும் துணிகரமான கொள்ளையாக கருதப்படுகிறது. அந்த பொருட்கள் கடந்த 2021ம் ஆண்டே மீட்கப்பட்டது. தற்போது மோனாலிசா ஓவியம் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் பாரிஸ் நகர காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் கொள்ளை நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை ஆண்டவர் நெப்போலியன். மன்னர் நெப்போலியனின் வீரம் புகழ்பெற்ற மாவீரன் அலெக்சாண்டரின் வீரருக்கு இணையாக போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget