மேலும் அறிய

அச்சச்சோ.. அமெரிக்காவில் ஆபீசை காலி செய்த மெட்டா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்...! என்னதான் காரணம்...?

அமெரிக்காவில் உள்ள தங்களது அலுவலகங்களை பிரபல நிறுவனங்களான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் காலி செய்துள்ளன.

உலகெங்கும் கடந்தாண்டு இறுதி முதல் லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இணையதளங்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் பெருநிறுவனங்களில் இதன் தாக்கம் மிக மோசமான அளவில் ஏற்பட்டுள்ளது.

லே ஆஃப்:

பெரு நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் மற்றும் பல்வேறு பிரபல செயலிகளிலும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். இதனால், உலகெங்கிலும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


அச்சச்சோ.. அமெரிக்காவில் ஆபீசை காலி செய்த மெட்டா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்...! என்னதான் காரணம்...?

இந்த நிலையில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள தங்களது அலுவலகங்களை காலி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சியாட்டில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் மெட்டா நிறுவனம் சியாட்டிலில் உள்ள தங்களது அலுவலகத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டனின் பெல்லோவில் உள்ள தங்களது அலுவலகத்தையும் காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அலுவலகம் காலி:

ஃபேஸ்புக் நிறுவனம் சியாட்டிலின் டவுட்டவுன் நகரில் உள்ள தங்களது ஆறு அடுக்கு மாடி அலுவலகத்தை துணை குத்தகைக்கு விடுவதை கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளதாக சியாட்டில் டைம்ஸ் நாளிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அச்சச்சோ.. அமெரிக்காவில் ஆபீசை காலி செய்த மெட்டா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்...! என்னதான் காரணம்...?

மேலும், கடந்த வெள்ளிக்கிழமையிலே மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது வாஷிங்டனின் பெல்லோவில் உள்ள தங்களது 26 அடுக்கு சிட்டி சென்டர் பிளாசா அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும் திட்டமில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த 26 அடுக்கு மாடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் கையெழுத்திட்டுள்ள குத்தகை ஒப்பந்தமானது வரும் 2024 அதாவது அடுத்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

உலகெங்கிலும் நடைபெற்று வரும் லே ஆஃப் காரணமாகவே பெருநிறுவனங்களான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை காலி செய்துள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் இருந்து 726 பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வொர்க் ப்ரம் ஹோம்:

தற்போது மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறையை வழங்க திட்டமிட்டுள்ளனர். பெருந்தொற்று காலம் முதல் பல நாடுகளிலும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள லே ஆஃப் சிக்கல் காரணமாக முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியும், ஊதியத்தை குறைத்தும் நடவடிக்கை எடுத்து வருவது பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget