மேலும் அறிய

இஸ்ரேலிய பணயக்கைதிகளை தவறுதலாக கொன்ற இஸ்ரேல் ராணுவம்.. போரால் தொடர்ந்து நிலைகுலையும் காசா

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டு பணயக்கைதிகள், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தவறுதலாக கொல்லப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வடக்கு காசாவை நிலைகுலைய வைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 18,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 

அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் போர்:

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, ஏழு நாள்கள் தொடர்ந்தது. 

தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் பிடிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் பிடித்த வைத்த பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தெற்கு காசா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டு பணயக்கைதிகள், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தவறுதலாக கொல்லப்பட்டனர். அதை தவிர்த்து, பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஷிஜாய்யா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளை தவறுதலாக கொன்ற இஸ்ரேல் ராணுவம்:

கடந்த சில நாட்களாகவே, இஸ்ரேல் ராணுவம், அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், அவர்களை அச்சுறுத்தலாக நினைத்து இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மூவரும் சிறைபிடிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர் அல்லது ஹமாஸ் அமைப்பினர், அவர்களை அங்கேயே விட்விட்டு சென்றிருக்கலாம். அந்த இடத்துக்கு பணயக்கைதிகள், எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை. ராணுவம், வருத்தம் தெரிவித்து கொள்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

ஆயுதங்களை போட்டுவிட்டு சரண் அடைந்துவிடுமாறு ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து இஸரேல் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், "போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் அமைப்பின் முடிவு  ஆரம்பமாகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் ஒன்று சொல்லி கொள்கிறேன். எல்லாம் முடிந்துவிட்டது. யஹ்யா சின்வாருக்காக (ஹமாஸ் அமைப்பின் தலைவர்) உயிரை விட்டு விடாதீர்கள். இப்போதே சரணடையுங்கள். கடந்த சில நாட்களில், 12க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நமது படைகளிடம் சரணடைந்துள்ளனர்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs PBKS LIVE Score: ப்ளேஆஃப் சுற்றில் நீடிக்கப்போவது பஞ்சப்பா? பெங்களூரா? டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்!
RCB vs PBKS LIVE Score: ப்ளேஆஃப் சுற்றில் நீடிக்கப்போவது பஞ்சப்பா? பெங்களூரா? டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்!
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Narayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs PBKS LIVE Score: ப்ளேஆஃப் சுற்றில் நீடிக்கப்போவது பஞ்சப்பா? பெங்களூரா? டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்!
RCB vs PBKS LIVE Score: ப்ளேஆஃப் சுற்றில் நீடிக்கப்போவது பஞ்சப்பா? பெங்களூரா? டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்!
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
Fact Check: நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
Embed widget