மேலும் அறிய

Indonesia : 174 பேர் உயிரிழப்பு : இந்தோனேசிய கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலா? கலவரமா? நடந்தது என்ன..?

இந்தோனேசியா கால்பந்து அரங்கில் நடந்த துயர சம்பவத்தால் 174 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கால்பந்து மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. முக்கிய போட்டிகளுக்கு முன்பு, ரசிகர்களிடையே அதிகம் ஆர்வம் காணப்படும். இதனால் ரசிகர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. 

அந்த வகையில், இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிக்கு நடுவே ஏற்பட்ட மோதலின்போது 174 பேர் பலியாகினர். விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த மிக மோசமான கலவரமாக இது கருதப்படுகிறது. 

 

கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங்கில் சனிக்கிழமை பிற்பகல் கூட்டம் நிரம்பி வழிந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றது. உள்ளூர் கால்பந்து அணியான அரேமா, எதிர் அணியான பெர்செபயா சுரபயாவை எதிர்கொண்டது.

முன்னதாக, இரு அணிகளின் ரசிகர்களால் ஏற்படக்கூடிய கலவரத்தைத் தடுக்க அரேமா ரசிகர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பெர்செபயா 3-2 என்ற கணக்கில் வென்ற பிறகு, ஆடுகளத்தில் இருந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசினர். 

இது கலவரமாக மாறியது. ரசிகர்கள், போலீஸ் கார்களை இடித்து சேதப்படுத்தினர். இதை தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 180 பேர் காயமடைந்தனர்.

கால்பந்து ரசிகர்கள், மைதானத்திற்கு உள்ள நுழைந்ததை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பார்வையாளர்கள் மத்தியில் அச்சம் பரவியதால், ஆயிரக்கணக்கானோர் கஞ்சுருஹான் மைதானத்தில் இருந்து வெளியேற முயற்சித்தனர். அப்போது, அங்கு பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதற்கிடையே, போட்டியின்போது, கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா தெரிவித்துள்ளது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பின்புதான், நிலைமை மோசமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, "கால்பந்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இது ஒரு இருண்ட நாள். மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சோகம் நிலவுகிறது" என்றார்.

முதற்கட்ட தகவல்களின்படி, இறப்பு எண்ணிக்கை சுமார் 130 ஆக இருந்தது. ஆனால், அதிகாரிகள் பின்னர், உயிர் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது என அறிவித்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.

விசாரணை நடத்தப்படும் வரை இந்தோனேசியாவின் டாப் லீக்கில் அனைத்து போட்டிகளையும் நிறுத்த வேண்டும் என்று அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Embed widget