மேலும் அறிய

"இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணுவதில் தீவிரம்" - மனம் திறந்த கனட பிரதமர் ட்ரூடோ

இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கிறார்கள் என கனட பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகள் மத்தியல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த சம்பவம் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனட நாட்டு குடிமகனை அவரது நாட்டிலேயே புகுந்து எப்படி கொல்லலாம் என கனட அரசு தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆனால், கனட அரசின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது. இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக இந்தியா விமர்சித்துள்ளது.

பரபரப்பான சூழலில் இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு:

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசியுள்ளார். டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் கிடைத்த முடிவுகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடந்த சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் இந்திய, கனட விவகாரம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்றாலும் சந்திப்பின்போது, இந்த விவகாரம் குறித்து பேச்சு எழுப்பப்பட்டதாகவும் கனட அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பிளிங்கன் கேட்டு கொண்டதாகவும்  Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுடன் நெருக்கமான உறவை கட்டமைப்பதில் தீவிரமாக உள்ளதாக கனட பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனட நாளிதழ் நேஷனல் போஸ்ட்-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியா வளர்ந்து வரும் வலிமையான பொருளாதாரம்.  புவிசார் அரசியலில் முக்கிய நாடாக உள்ளது.

மனம் திறந்த கனட பிரதமர் ட்ரூடோ:

கடந்த ஆண்டு, வெளியிடப்பட்ட இந்தோ-பசிபிக் வியூக அறிக்கையில் நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவை அமைப்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். அதே நேரத்தில், சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி புரியும் நாடு என்ற வகையில், இந்த விவகாரத்தின் முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

வாஷிங்டனில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும்போது, ​​ஜெய்சங்கரிடம் பிளிங்கன் இந்த பிரச்னைகளை எழுப்புவார் என்று உத்தரவாதம் கிடைத்தது. கனட மண்ணில் இந்திய அரசின் ஏஜென்ட்கள், கனட குடிமகனைக் கொன்றார்கள் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் அவர்கள் (அமெரிக்கா) ஈடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கிறார்கள். இது அனைத்து ஜனநாயக நாடுகளும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் அனைத்து நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று" என்றார்

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget