மேலும் அறிய

"இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணுவதில் தீவிரம்" - மனம் திறந்த கனட பிரதமர் ட்ரூடோ

இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கிறார்கள் என கனட பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகள் மத்தியல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த சம்பவம் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனட நாட்டு குடிமகனை அவரது நாட்டிலேயே புகுந்து எப்படி கொல்லலாம் என கனட அரசு தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆனால், கனட அரசின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது. இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக இந்தியா விமர்சித்துள்ளது.

பரபரப்பான சூழலில் இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு:

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசியுள்ளார். டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் கிடைத்த முடிவுகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடந்த சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் இந்திய, கனட விவகாரம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்றாலும் சந்திப்பின்போது, இந்த விவகாரம் குறித்து பேச்சு எழுப்பப்பட்டதாகவும் கனட அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பிளிங்கன் கேட்டு கொண்டதாகவும்  Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுடன் நெருக்கமான உறவை கட்டமைப்பதில் தீவிரமாக உள்ளதாக கனட பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனட நாளிதழ் நேஷனல் போஸ்ட்-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியா வளர்ந்து வரும் வலிமையான பொருளாதாரம்.  புவிசார் அரசியலில் முக்கிய நாடாக உள்ளது.

மனம் திறந்த கனட பிரதமர் ட்ரூடோ:

கடந்த ஆண்டு, வெளியிடப்பட்ட இந்தோ-பசிபிக் வியூக அறிக்கையில் நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவை அமைப்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். அதே நேரத்தில், சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி புரியும் நாடு என்ற வகையில், இந்த விவகாரத்தின் முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

வாஷிங்டனில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும்போது, ​​ஜெய்சங்கரிடம் பிளிங்கன் இந்த பிரச்னைகளை எழுப்புவார் என்று உத்தரவாதம் கிடைத்தது. கனட மண்ணில் இந்திய அரசின் ஏஜென்ட்கள், கனட குடிமகனைக் கொன்றார்கள் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் அவர்கள் (அமெரிக்கா) ஈடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கிறார்கள். இது அனைத்து ஜனநாயக நாடுகளும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் அனைத்து நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று" என்றார்

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget