மேலும் அறிய

பாகிஸ்தானில் அதிகரிக்கும் குற்றங்கள்... 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை... ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஒருபுறம் அந்நாட்டில் அதிகரிக்கும் நிலையில், தண்டனை விகிதம்  0.2 விழுக்காடு என்ற அளவில் குறைவாகவே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் ஏற்கெனவே ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் கவலை தருபவையாக உள்ளன.

2 மணி நேரத்துக்கு ஒருவர் பாலியல் வன்கொடுமை

பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானிய சேனலான SAMAA தொலைக்காட்சியின் புலனாய்வுப் பிரிவு (SIU) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஒருபுறம் அந்நாட்டில் அதிகரிக்கும் நிலையில், தண்டனை விகிதம்  0.2 விழுக்காடு என்ற அளவில் குறைவாகவே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகளின்படி 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதன் பொருள் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

தண்டனை விழுக்காடு குறைவு!

இந்நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் பெண்களுக்கு நிலவும் சமூக பாகுபாடு, பெண்களுக்கு உள்ள சமூகத்தைப் பற்றிய பயம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் புகார்கள் அளிக்க முன்வராத நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக்கலாம் எனவும் இந்த ஆய்வை மேற்கொண்ட நபர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அந்நாட்டில் 2017ஆம் ஆண்டு சுமார் 3,327 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2018ஆம் ஆண்டில் 4,456 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 4,573 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 4,478 வழக்குகளும், 2021ஆம் ஆண்டில் 5,169 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2022ஆம் ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 305 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள 44 நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான 1,301 வழக்குகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளன. 2,856 வழக்குகளில் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், 4 விழுக்காடு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பெண்களுக்கு எதிரான பாரபட்சம்: தரவரிசையில் முதலிடம்

இந்தக் காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை விகிதம் 0.2 விழுக்காடாகவே இருந்தது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2020ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தின் தரவரிசையின்படி  நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான 75 நாடுகளில் பாகிஸ்தானை முதலிடம் பிடித்தது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கைபடி, பாலின சமத்துவத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை இரண்டாவது மோசமான நாடாக வரிசைப்படுத்தியுள்ளது. 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 145வது இடத்தில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு இடம் முன் பாகிஸ்தான் உள்ளது.

அதிகரிக்கும் பாலின இடைவெளி, ஆணவக் கொலைகள்

பாகிஸ்தானில் மொத்தம் 107 மில்லியன் பெண்கள் வசிக்கின்றனர். பாலின இடைவெளி இவர்களில் 56.7 விழுக்காட்டினரை பாதிக்கிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர அறிக்கை தொடங்கப்பட்டது முதல் இதுவே உச்சபட்ச விழுக்காடு ஆகும்.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 1,957 ஆணவக் கொலைகள் பதிவாகியுள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் அறிக்கை தெரிவித்துள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Breaking News LIVE: புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Breaking News LIVE:புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Breaking News LIVE: புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Breaking News LIVE:புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Embed widget