மேலும் அறிய

1 மில்லியன் டாலர் இன்சூரன்ஸிற்காக இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன்!

இரண்டாவது மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவருக்கு 33ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முதல் மனைவி இறந்தபிறகு ஆண்கள் சிலர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் ஒருவர் முதல் மனைவி இறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த இரண்டாவது மனைவி இறந்த பிறகு அவர் செய்த கொலை சம்பவம் வெளியே வந்துள்ளது. யார் அவர்? எதற்காக அப்படி செய்தார்?

அமெரிக்காவைச் சேர்ந்தவர் லின் கீல்(58). இவருடைய முதல் மனைவி எலிசபெத்(42) கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அப்போது அவர் பனிக்கட்டிகளுக்கு நடுவே இருந்த தரைப்பகுதியில் விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு தன்னைவிட 20 வயது குறைந்த டையானா என்ற பெண்ணை கீல் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் வடக்கு காரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

டையானாவிற்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அந்தக் குழந்தையுடன் கீலை திருமணம் செய்துள்ளார். டையானாவின் மகள் தற்போது 18 வயது முடிந்து கல்லூரியில் பயின்று வந்துள்ளார். டையானா ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அவருடைய மகள் தன்னுடைய தாயை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதேபோல் மருத்துவமனையில் டையானாவுடன் பணிபுரியும் சக செவிலியர்களும் டையானாவை பணிக்கு வராதது தொடர்பாக மகளிடம் கேட்டுள்ளனர். 


1 மில்லியன் டாலர் இன்சூரன்ஸிற்காக இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன்!

இதனால் சற்று பதற்றம் அடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் டையானாவின் நண்பர்கள் மட்டும் அவருடைய உறவினர்கள் அனைவரும் கணவர் கீல் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். ஏனென்றால் கீல் தன்னுடைய மனைவிடம் அடக்குமுறையை கையாள்பவராக இருந்துள்ளார். இதன்காரணமாக அவர் டையானாவிடம் அடிக்கடி சண்டை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று கீல் இடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்,”என்னுடைய மனைவி இப்படி தான் அடிக்கடி சில நாட்கள் வீட்டிற்கு வராமல் இருப்பார். அதன்பின்னர் சில தினங்கள் கழித்து மீண்டும் வருவார்” என சாதாரணமாக கூறியுள்ளார். அவரின் பதில் காவல்துறையினருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. 


1 மில்லியன் டாலர் இன்சூரன்ஸிற்காக இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன்!

இந்த விசாரணைக்கு பிறகு மார்ச் 12ஆம் தேதி ஒரு பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த சடலத்தை மீட்டு அவர் அணிந்திருந்த திருமண மோதிரம் மூலம் டையானா என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் உடற்கூர் ஆய்வில் அவர் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. 

காவல்துறையினர் கீலை பிடிக்க வந்தப் போது அவர் தப்பியுள்ளார். பின்பு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை மெக்சிகோ நாட்டின் எல்லையில் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். டையானா பெயரில் 1 மில்லியன் டாலர் காப்பீட்டை கடந்த ஆண்டு இவர் எடுத்துள்ளார். அதன்பின்னர் இந்த ஆண்டு நடந்த சண்டையின் போது அவரை தலையில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.

அவருடைய சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் வீசியுள்ளார். இந்த வழக்கு கடந்த மாதம் நீதிமன்றத்தில் வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு அன்மையில் வெளியாகியுள்ளது. அதன்படி லின் கீலிற்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் முதல் மனைவி எலிசெபத் இறப்பு தொடர்பாகவும் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

மேலும் படிக்க: புயல்னா... இது தான்யா புயல்... இஸ்தான்புல்லை கதம் செய்யும் புயல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.